தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 50 ஆண்டுகளில் பார்க்காத வெள்ளத்தை தற்போது கேரளா கண்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் கேரள தேசமே வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது.
தற்போது இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால், பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அடுத்த வாரம் வரும் (ஆகஸ்ட் 25) ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரோகினி, பிரகாஷ்ராஜ், அபி சரவணன் உள்ளிட்ட நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் விஜய்சேதுபதி ரூ. 25 லட்சமும், தனுஷ் 15 லட்சமும் நிதியை கொடுத்து உதவியுள்ளனர்.