தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.
இந்த படம் ’தேவர் மகன்’ பட இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதல் பாகத்தில் இறந்த நாசரின் மகன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பார் என சொல்லப்படுகிறது.
முக்கிய கேரக்டரில் வடிவேலு மற்றும் ரேவதி நடிப்பார்கள் எனத் தெரிகிறத.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூப நாயகிகள் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்கவுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் ’விஸ்வரூபம்’ மற்றும் ’உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தனர்.
கமலின் அண்மைக்கால படங்களில் இவர்கள் தவறாது இடம் பெற்று விடுகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.