தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்.
இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ரஜினிகாந்த் தன் கையால் நினைவு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அவரின் செயலை சற்றும் எதிர்பாராத ரஜினி ஏன் இப்படி? வேண்டாம் என மறுத்துள்ளார். அதன்பின்னர் அவருக்கு நினைவு பரிசை வழங்கினார்.
ரஜினியை விட எஸ்ஏசி வயதில் மூத்தவர். அவர் ஏன் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்? என விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
Vijay father SA Chandrasekar got blessed from Rajinikanth