தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில்.. தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய்யின் படமும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தமிழக சட்டமன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது-
அதில்.. இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே… நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்… என்ற வாசகங்கள் இடம் பிடித்துள்ளன.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் தற்போது உயிருடன் இல்லை. அதனால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப வருவதாக ரஜினிகாந்த பேசியிருந்தார்.
விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் ரஜினியை வம்பிழுக்காத நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Vijay fans stick political posters in trichy