தல-தளபதி மீண்டும் இணைய வாய்ப்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தல-தளபதி மீண்டும் இணைய வாய்ப்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்துவிட்டனர்.

இனிமேல் அவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்குமா? என்பது நிச்சயமில்லாத ஒன்றுதான்.

ஆனால் அதன்பின்னர் அவர்கள் எங்கேயாவது இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டுமே உண்டு.

அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர் என்பதால் இதுபோன்ற போட்டோக்கள் இனிமேலும் கிடைப்பது அரிதாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பு மங்காத்தா மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களின் சூட்டிங் ஒரே தளத்தில் நடைபெற்றதால் இருவரும் சந்தித்து போஸ் கொடுத்தனர்.

அதன்பின்னர் அவர்கள் மீண்டும் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இணையவிருக்கிறார்களாம்.

அட்லி இயக்கும் விஜய் படமும், சிவா இயக்கும் அஜித் படமும் ஒரே இடத்தில் நடைபெற உள்ளதால், இருவரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay and Ajith meeting will happen very soon at shooting

ஜல்லிக்கட்டு போலீஸ் கலவரம் குறித்து சூர்யா பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு போலீஸ் கலவரம் குறித்து சூர்யா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 (சி3) பிப்ரவரி 9ல் திரைக்கு வருகிறது.

உலகமெங்கும் 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவில் போலீஸ் நடத்திய கலவரம் குறித்து சூர்யாவிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து சூர்யா பேசும்போது…

‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் விரும்பத்தக்காத செயல்கள் நடந்ததை அறிந்தேன்.

ஏதோ ஒரு சில போலிஸ் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த போலீஸ் ஆபிசர்களையும் எளிதாக குறை சொல்லமுடியாது. எல்லாரும் அப்படியில்லை” என்றார்.

Suriyas reaction to Police violence in Jallikattu Protest

chennai-police-fire-Jallakattu

‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer gnanavel rajaசூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்கவும், அவரது வசூல் சாதனைகளையும் நெருங்கவும் பல நடிகர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், அவரை நெருங்க முடியாமல் போனதால், அவரை ஒப்பிட்டு பேசாமல், Non-Rajini Record என்று தங்கள் சாதனைகளை கூறிவருகின்றனர்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்துள்ள சி3 படம் ரிலீஸ் ஆகிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

வழக்கம்போல இச்சந்திப்பிற்கு ஹீரோயின்கள் வரவில்லை.

அப்போது படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது…

“சில விஷயங்களை இங்கே சூர்யா அனுமதியுடன் கூற விரும்புகிறேன்.

ஆந்திராவில் ரஜினிக்கு அடுத்த மார்க்கெட்டை சூர்யா பிடித்துள்ளார்.

நடிகர்களின் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அவர்களின் மார்கெட் வேல்யூவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சி3 படம் இப்போதே லாபத்தை நெருங்கிவிட்டது.

அது ரூ. 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

Suriya is next to Rajinis market says Gnanavelraja

சிக்ஸ் பேக் ஹீரோக்களுக்கு ராதாரவி அட்வைஸ்

சிக்ஸ் பேக் ஹீரோக்களுக்கு ராதாரவி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radharavi speechமிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினகர்ளாக கலந்து கொண்டனர்.

விழாவில் ராதாரவி பேசியதாவது…

“இப்படத்தின் நாயகி அபிநயாவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

அவரை நான் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினாராக சேர்த்து இருக்கிறேன்.
அவர் மிகவும் திறமையான பெண்.

என் தந்தை எம். ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கும். ஆனால் அதற்கே இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.

அவர் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.

அதுபோல் இங்கு வந்திருக்கும் நட்ராஜ் நல்ல உயரமான திறமையான நடிகர்.

அவர் இப்போ ஒல்லியாக இருக்கிறார். ஏன்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் அடுத்த படத்திற்காக இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக சொன்னார்.

இவரைப் போல நிறைய நடிகர்கள் சிக்ஸ்பேக் வைக்கிறார்கள்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் உடம்பை குறைக்கவும் இல்லை. ஏற்றவும் இல்லை. அவர்கள் நன்றாக நடிக்கவில்லையா?

உடம்பை ஏற்றி இறக்கிய சில ஹாலிவுட் நடிகர்கள் இன்றைய நிலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சினிமாவுக்காக இப்படி செய்கிறீர்கள். ஆனால் உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார்.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் படத்தின் கதைக்களம்

சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் படத்தின் கதைக்களம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Nayantharaரெமோ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் உணவு கலப்படம் மற்றும் அதனைச் சார்ந்த அரசியலைப் பற்றிய கதைக்களத்தை கொண்டுள்ளதாக கூற்ப்படுகிறது.

மேலும் இதில் சென்னையைச் சார்ந்த இளைஞனாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

‘144 தடை ஏன்..? என்னையும் கைது செய்யுங்கள்..’ சீறிய சிம்பு

‘144 தடை ஏன்..? என்னையும் கைது செய்யுங்கள்..’ சீறிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது…

“அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

அதனால், என்னையும் கைது செய்யுங்கள்.

கைதானவர்களை விடுவிக்கவில்லை என்றால் அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன்

கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த எழுச்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

எனவே இதை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும்.

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன?” என்று பல கேள்விகளை அவர் அடுக்கடுக்காக பேசினார்.

More Articles
Follows