தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 1ம் தேதி “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய 4 படங்கள் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் செல்ஃபி, ‘மன்மத லீலை, இடியட்’ ஆகிய படங்களுக்கு காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி 8 மணி மற்றும் 8.30 ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது.
இந்த நிலையில் மன்மதலீலை பட காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.
‘மன்மத லீலை’ பட தயாரிப்பாளருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்தப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார்.
ஆனால் அவரின் தொகையை படத்தின் தயாரிப்பாளர் தரவில்லை என்பதால் பணத்தைக் கொடுத்த பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரவு சொன்னதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர்களின் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் மதியக் காட்சிகள் முதல் படம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.
Venkat Prabhu’s Manmatha leelai faces new issue