தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாது, தன் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் வெளிப்படையாக கூறி வருபவர் கமல்ஹாசன்.
அண்மையில் ஒரு பேட்டியில் மகாபாரதம் குறித்து தன் கருத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த கருத்து சர்ச்சைக்குரியானது.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார்.
இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவு செய்தார்.
இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது, இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வருகிற மே 5ஆம் தேதி கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Valliyur Court order in the issue of Kamal speech insulting Hindu epic Mahabharat