‘வலிமை’ படத்தின் ஸ்டோரி இதுதான்..; சென்சார் போர்டு வெளியிட்ட தகவல்

‘வலிமை’ படத்தின் ஸ்டோரி இதுதான்..; சென்சார் போர்டு வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

இந்த்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் & இந்தி என 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தமிழில் ‘வலிமை’ படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றது. 178 நிமிடங்கள் (2:58) மணி படம் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை படத்தின் கதை குறித்து ஒன்லைனை பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அரசின் சென்சார் இணையத்தில் படத்தின் கதை, சென்சார் போர்டு மூலம் (BBFC) நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கஞ்சா ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் வியாபாரத்தில் உலகளவில் ஈடுபட்டுள்ள கிரிமினல் பைக்கர் கும்பலை தமிழக காவல்துறை எப்படி கண்டுபிடித்து வேட்டையாடுகின்றனர்” என ஒன்லைனை குறிப்பிட்டுள்ளனர்.

Valimai story leaked by censor board ?

ரஜினிகாந்துடன் இணையும் விஜய் – சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

ரஜினிகாந்துடன் இணையும் விஜய் – சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு ரஜினியை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யார்? என்பதே கோலிவுட்டின் கேள்வியாக உள்ளது.

தேசிங்கு, நெல்சன், பாண்டியராஜ் சிவா, கேஎஸ் ரவிக்குமார் என பல பிரபல இயக்குனர்களின் பெயர்கள் பேசப்பட்டன.

இந்த பலத்த போட்டியில் நெல்சன் திலீப்குமார் முன்னணியில் இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார்.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெறும் முன்னரே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

‘அண்ணாத்த’ வெற்றிக்கு பின்னர் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன

Beast director joins next with Rajinikanth

நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

நல்லவர்கள் வருவதில்லை… மோசமான காவல்துறை..; முதல்வருக்கு கடிதம் எழுதிய ரிட்டையர்டு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வரின் கவனத்திற்கு

எனது பெயர் சிவக்குமார், எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். எனது தந்தை காவல்துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் கோயமுத்தூர் இருப்பு பாதை காவல்நிலையத்தில் 1964 ம் ஆண்டு பணி செய்து கொண்டிருக்கும் போது தங்க கட்டிகள் (18) கடத்தி வந்தவரை கைது செய்தவர்.

நானும் 1993ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு கடைசியாக இரயில்வே திருப்பூரில் பணி செய்து வந்தேன்.

நான் சிறுவயதில் உதகை பஸ் நிலையம் அருகே நியூஸ்பேப்பர் விற்பனை செய்தும், கட்டிடம் வேலை செய்தும் பின்பு ஓட்டலில் வேலை செய்து பின்பு தான் காவல்துறையில் சேர்ந்தேன்.

நான் இரயில்வே காவல் நிலையத்தில் வேலை செய்து வரும்போது 2015ஆம் ஆண்டு என்னை வேண்டும் என்றே திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு காவல்நிலையத்தில் 1 மாதம் தனி அலுவலாக அனுப்பி வைத்தனர்.

நானும் அதிகாரிகளின் ஆணையை மதித்து செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு சென்றேன்.

அப்போது எனது மகள் 12ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணிமாறுதல். நான் செங்கல்பட்டு இரயில்வே காவல்நிலையத்திற்கு 1 மாதம் தனி அலுவல் முடிந்தும் என்னை மாற்றம் செய்யாமல் இருந்ததால் நான் மருத்துவ விடுப்பில் சென்றேன்.

அப்போது எனக்கு இரண்டு மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. நானும் அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

எனக்கு பதவி உயர்வு ஒன்றரை வருடம் கழித்து தான் HC to SSI வழங்கப்பட்டது. காரணம் கேட்டால் சர்வீஸ்புக் காணாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.
பிறகு மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் இருந்து காட்பாடி இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தார்கள்.

அப்போது எனது மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில் பணி மாறுதல் ஏன் பழி வாங்குகிறார்கள். எனது குழந்தைகளின் வாழ்க்கை கல்வியை நான் எப்படி பார்ப்பது? மேலும் காட்பாடி இரயில்வே காவல் நிலையத்திற்கு இருந்து மேட்டுப்பாளையம் இரயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றுதல் வாங்கி வந்தேன்.

ஆனால் என்னை 1 மாதம் கூட வேலை செய்யவிடாமல் கோயமுத்தூர் இரயில்வே காவல்நிலையம் ஈரோடு இரயில்வே காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் அடிக்கடி மாற்றம். ஏன் என்று கேட்டால் நீங்கள் தான் அனுபவசாலி என்று கூறி கொடுமை செய்தார்கள்.

பிறகு திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் யாரும் இல்லை. நீங்கள் தான் வந்து வேலை செய்ய வேண்டும்.

கட்டாயப்படுத்தி மீண்டும் திருப்பூர் இரயில்வே காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது காவல் ஆளினர்கள் யாரும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரமாட்டார்கள்.

இரவு பணிக்கும் 8.00 மணிக்கு வரவேண்டும். ஆனால் காவல் ஆளினர்கள் 10.00 மணிக்கு வருவார்கள். வரும்போது மதுபோதையில் தான் வருவார்கள்.

இரவு 1 மணி வரை வேலை செய்வார்கள். அதற்கு அவர்களை பார்க்கவே முடியாது எங்கே படுத்து எந்திரித்து காலை 6.00 மணிக்கு வந்து அறிக்கை செய்வார்கள். யாரையும் கேள்வி கேட்ககூடாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். காரணம் எஸ்.பி., டிஐஜி, ஐஜி அதிகாரிகள் சென்னையில் இருப்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு காவலர் பணிக்கு வராமல் 3 நாட்கள் இருந்தவரை அழைத்து அறிவுரை வழங்கியபோது என்னை வசைச்சொல்லில் திட்டினார்.

நான் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர் அந்த காவலர் எந்த ஜாதி என்று கேட்கிறார். இப்படி காவல்துறை சென்று கொண்டிருப்பதால் மனமுடைந்து இனிமேல் காவல்துறையில் நல்லவர்கள் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்து கடந்த 2020ம் தேதி விருப்ப ஓய்வுக்கு மனு சமர்ப்பித்தேன்.

விருப்ப ஓய்வு பெற்று 1 வருடம் ஆகியும் எனக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எஸ்.பி., டிஐஜி அவர்களிடம் பலமுறை தெரிவிக்க எந்த தகவலும் இல்லை.

நான் காவல்துறையில் 28 ஆண்டுகள் வேலை செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்து வந்தேன்.

நான் திருப்பூர் இரயில்வே காவல்நிலையத்தில் பணி செய்து வந்தபோது என்னால் ஒருவரின் உயிரையும் காப்பாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு சந்தோஷம். நல்லவர்கள் வேலை செய்ய வருவது இல்லை. காவல்துறை ரொம்ப மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

– சிவக்குமார், தலைமை காவலர் எண் 110

An ordinary police requests Tamil Nadu cm

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

காதலர் தினத்தில் ‘அரபி குத்து..’ போடும் விஜய் சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ரிலீஸ் செய்திட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் “அரபி குத்து” பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில்… கோலமாவு கோகிலா & டாக்டர் பட பாடல்கள் ப்ரோமோ போல இந்த பாடலுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் மற்றும் விஜய்யின் குரலும் இடம்பெற்றுள்ளது.

Arabic Kuthu – Beast First Single Promo is here

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

‘மாலை’ படத்தில் மாஸ்டர் ரீ-என்ட்ரி..; மகுடம் சூடுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குநர் ராபர்ட் மறுபிரவேசம் செய்யும் ‘மாலை’ படத்தின் தொடக்க விழா!

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ‘மாலை’.

இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.

ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

இயக்குநர் ராஜேஷ் ராஜா அரை மணி நேரத்தில் சொன்ன கதை பிடித்துப்போய் படத்தில் நடிக்கச் சம்மதிக்கும் அளவிற்கு அவர் கதை சொல்லும் விதம் ராபர்ட் மாஸ்டருக்குப் பிடித்து இருந்ததாகக் கூறுகிறார்.

அதை மீண்டும் விரிவாகச் சொல்லக் கேட்டபோதும் அவ்வளவு தெளிவாகக் கதை சொன்னதால் உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.

இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர் .

மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறது. மகாலட்சுமியின் நடிப்பாற்றலை இயக்குநர் சோதித்துப் பார்த்தபோது நடித்துக் காட்டிய விதம் இயக்குநரை வியக்கவைத்திருக்கிறது.

மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் ‘மாலை’ படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்.

Dance Master Robert re entry in Maalai

தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்த 3 டாப் ஹீரோயின்ஸ்

தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்த 3 டாப் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.

“நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.

அஜித் அந்தரே, COO Viacom18 Studios படம் குறித்து கூறுகையில்..,
“Viacom18 Studios தயாரிப்பில், பல தளங்களிலும் மொழிகளிலும் தரமான கதைகள் சொல்ல முடியும் என நம்புகிறோம்.

எங்கள் தயாரிப்பில் சமீபத்திய தமிழ் மற்றும் தெலுங்கு படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இருமொழிகளிலும் இதயம் கவரும் ஒரு அழகான படைப்பை உருவாக்கியுள்ளோம்.

திறன் மிகுந்த நடிகர்கள், திறமையான புதிய இயக்குனர் மற்றும் அதீத திறமை கொண்ட தயாரிப்பாளர் குழுவுடன், உருவாகும் ‘நித்தம் ஒரு வானம்’ (தமிழ்) மற்றும் ‘ஆகாஷம்’ (தெலுங்கு) என இரண்டு படங்களும் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும், பல சாதனைகளை தகர்க்கும் என்று நம்புகிறோம்”.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ்
இயக்குநர் – Ra.கார்த்திக்
ஒளிப்பதிவு – விது அய்யனா
இசை – கோபி சுந்தர்
கலை – எஸ். கமலநாதன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப் பயிற்சி – விக்கி
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் – S.வினோத் குமார்
நடனம் – லீலாவதி குமார்
பாடல்கள் – கிருத்திகா நெல்சன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Viacom18 Studios & Rise East Entertainment Presents Ashok Selvan starrer ‘Nitham Oru Vaanam’

More Articles
Follows