தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு வழியாக தனக்கு போடப்பட்ட ரெட் கார்டு பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்து வைகைப் புயல் வடிவேலு விரைவில் திரையை கடக்கவிருக்கிறார்.
விரைவில் ‘நாய் சேகர்’ மற்றும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கவுள்ளார் வடிவேலு.
இந்த நிலையில் அடுத்து ஒரு பிரச்சினை வடிவேலுக்காக உருவெடுத்துள்ளது.
இவர் நடிக்கவுள்ள ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ள படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்து வருகிறார்.
அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். இதுதான் இப்போ பிரச்சினை ஆகியுள்ளது.
அண்மையில் அளித்த பேட்டியில்… “தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் இந்த டைட்டில் பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது.
எனவே தற்போது ‘நாய் சேகர்’ என்ற தலைப்பை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என கேட்டிருக்கிறாராம் வடிவேலு.
ஆனால் சதீஷ் படக்குழு மறுத்துவிட்டதாம். எனவே இரு தரப்பிலும் பஞ்சாயத்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Vadivelu and Sathish joins for a new movie