தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை காணப்படுகிறது.
எனவே கடந்த 3 நாட்களாக நிறைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, கொடுங்கையூர் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோரி அந்த பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள மின் ஒயர் அறுந்து கிடப்பதால் அதை சரி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் எவரும் அந்த பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் விளையாடி உள்ளனர்.
அப்போது அதில் உள்ள 2 சிறுமிகளை மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்துள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் என்ற படத்திலும் இதுபோன்ற காட்சி இருக்கும்.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற உயிர்கள் பலியாவது எந்த வித்த்தில் நியாயம்?
மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் இருப்பதன் நோக்கம் என்ன?
அவர்களை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இதனால் அந்த உயிர்கள் மீட்கப்பட்டு விடுமா என்ன?
இதுபோன்ற அதிகாரிகளை தண்டிக்க சினிமாவைப் போல அந்நியன் வருவாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.