‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip movieமிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ட்ரிப்’ திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

இது குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் டெனிஸ், “முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றவர், படப்பிடிப்பிடிப்பு நடக்கையில் புலி ஒன்றை எதிர்கொண்ட மறக்க முடியாத அனுபவத்தையும் விவரித்தார்.
“படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் சற்றும் எதிர்பாராமல் திடீரென புலி ஒன்று வந்துவிட்டதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தோம். ஆயினும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. தடைகளின்றி படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்த உதவிய உள்ளூர்வாசிகளுக்கும், வன இலாக்கா அதிகாரிகளுக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது ஆதரவும், நடிக நடிகையரின் அர்பணிப்பு மிக்க ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க இயலாது. படப்பிடிப்பில் இத்தகைய சவால்கள் இருந்தாலும், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியது. படத்தில் இவர்கள் வரும் பகுதி ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்படும் என நம்புகிறேன்.

பிரவீண் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் துணிச்சலுடன் பணியாற்றியிருக்கிறார். ட்ரிப் திரைப்படம் சுனைனாவுக்கு நிச்சயமாக ஒரு திருப்பு முனையாக அமையும். படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அவர் புன்னகை மாறாமல் அனைவருடனும் அளவளாவினார். அவரது அர்பணிப்பும் மிகச் சிறந்த நடிப்பும் பல புதிய படவாய்ப்புகளைப் பெற்றுத் தரும். வி.ஜெ.ராகேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்ரியா, கல்லூரி வினோத், விஜே.சித்து, ஜெனிஃபர், மற்றும் ராஜேஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்” என்றார்.

நவம்பர் இறுதியில் தலக்கோணா மற்றும் கொடைக்கானலில் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் சித்து குமார் இசையமைக்க, உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

BREAKING முதன்முறையாக ரஜினியுடன் இணையும் மெலோடி கிங்

BREAKING முதன்முறையாக ரஜினியுடன் இணையும் மெலோடி கிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Imman first time team up with Rajini in Thalaivar 168தர்பார் படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் 168வது படம் என்பதால் தலைவர் 168 என்று தற்காலிக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை சிவா இயக்குகிறார். இதன் சூட்டிங் அடுத்த டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்களை அறிவித்து வருகின்றனர்.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பட இசையமைப்பாளர் இமான் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இமான் இசைப்பாளராக 100 படங்களை கடந்துவிட்டார். தற்போதுதான் முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையைமக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் வெறும் குத்துப்பாட்டுக்களே வரும் நிலையில் நல்ல நல்ல மெலோடி பாடல்களை கொடுத்து வருகிறார் இமான். எனவே இவரை மெலோடி கிங் என்றும் இசை ப்ரியர்கள் அழைக்கின்றனர்.

Music Composer Imman first time team up with Rajini in Thalaivar 168

‘சங்கத்தமிழன்’ மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் நிவேதா

‘சங்கத்தமிழன்’ மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் நிவேதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethurajs confident on Sanga Thamizhan movieஅடியே அழகே… அழகே அடியே என்ற பாடலை யாராலும் மறுக்க முடியாது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த பாடல் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் இடம் பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதன் பின்னர் இவரது நடிப்பில் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் வெளியானது.

இதில் டிக் டிக் டிக் படத்தை தவிர மற்ற படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளார்.

இதில் சங்க மித்ரன் மற்றும் தமிழரசன் ஆகிய இரு வேடங்ளில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதாவும் ராஷி கண்ணாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, நாசர், அனன்யா, மைம் கோபி, கல்லூரி வினோத், கயல் தேவராஜ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். தெலுங்கில் விஜய்சேதுபதி என்ற பெயரில் ரிலீஸ் செய்கின்றனர்.

இந்த படம் நாளை மறுநாள் நவம்பர் 15ல் வெளியாகவுள்ளது. இந்த படம் தனக்கு திருப்புமுனையான அமைய வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம் நிவேதா.

(சங்கத்)தமிழனை நம்பினோர் மோசம் போனதில்லை தானே…

Nivetha Pethurajs confident on Sanga Thamizhan movie

உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கும் ஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது

உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கும் ஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Frozen 2 Tamil press meetஉலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கும் ஃப்ரோஷன் படத்தொடரின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நவம்பர் 22ல் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தின் தமிழ் பதிப்பில் பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டத்திற்க்கான பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், ஹீரோயின் கதாப்பாத்திரமான எல்ஷாவிற்கு பின்னணி பேசியிருக்கும் ஸ்ருதிஹாசன், எல்ஷாவின் தங்கை பாத்திரமான ஆன்னாவிற்கு பின்னணி பேசியுள்ள திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்

பாடலாசிரியர் விவேக் படம் குறித்து பேசியதாவது…

உலகின் பிரபல நிறுவனமான டிஸ்னியுடன் இப்படி ஒரு அற்புதமான படத்தில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ஸ்ருதி ஹாசன், திவ்ய தர்ஷினி போன்ற திறமை மிக்க ஆளுமைகளுடன் பணிபுரிந்ததில் மேலும் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக உயிரூட்டியுள்ளார்கள். படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார்கள். நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விசயங்களை இழந்திருப்போம் ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம் இப்படத்தில் எனக்கு பிடித்தது, என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது எனும் அருமையான கருத்து தான். எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன் அவர் இப்படத்தின் தீவிர ரசிகை என்றார்.

ஓலஃப் கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்துள்ள சத்யன் வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டது…

நான் மிகுந்த மகிழ்ச்சியும் கௌரவமுமாக உணர்கிறேன். டிஸ்னி எனும் மிகப்பெரும் நிறுவனம் என் குரலை ஒத்துக்கொண்டு என்னை பணிபுரிய செய்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஓலஃப் கதாப்பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது எல்லோரையும் குதூகலப்படுத்த கூடியது. இப்படத்தை குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் திரையரங்கில் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆன்னாவிற்கு குரல் தந்துள்ள பிரபல தொகுப்பாளர் டிடி எனும் திவ்ய தர்ஷினி கூறியதாவது…

டிஸ்னியில் இருந்து இப்படத்தில் வேலை செய்யக் கேட்ட போதே நான் உற்சாகத்தில் மிதந்தேன் எப்படியானதொரு வாய்ப்பு. சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட். அதிலும் ராஜகுமாரி கதைகள் என்னை முன்வைத்ததாக உணர்வேன். எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள் ஆனால் இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள் அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வை தந்தது என்றார்.

படத்தின் நாயகி எல்ஷாவிற்கு பின்னணி பேசியுள்ள ஸ்ருதிஹாசன் கூறியதாவது..

ப்ரோஷன் படம் உலகெங்கிலும் பெரும் வெற்றிபெறக் காரணம் பல பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக , முன்னுதரணாமக இருப்பது தான். இந்த கதாப்பாத்திரத்திற்கு குரல் தந்த அனுவம் அலாதியானது. மிகவும் எளிமையாக என்னை பிரதிபலிப்பதாக இருந்தது. என் தங்கை அக்‌ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவு இப்படத்தில் பணிபுரிவதில் பேருதவியாக இருந்தது. திவ்ய தர்ஷினி ஆன்னா பாத்திரத்தை அற்புதமாக செய்திருந்தார். பாடலாசிரியர் விவேக் படத்திற்கு பொருத்தமான அருமையான வசனங்கள் தந்திருந்தார். வழக்கமாய் என் படங்களுக்கு நான் இரண்டு நாட்களில் டப்பிங் முடித்து விடுவேன் ஃப்ரோஷன் 2வை ஒரே நாளில் முடித்தேன். அதிலும் பாடலை நானே பாடியது எனக்கு பெரிய மகிழச்சி தந்தது என்றார்.

‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’

‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panipat stillsபன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை.

வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

‘மர்த் மராத்தா’ எனத் துவங்கும் இப்பாடல், பிரம்மாதமான இயற்கை சூழலில், ஒரு மாபெரும் கணபதி சிலையினை பின்னணியாகக் கொண்டு, அபாரமாக நடனமாடும் 1300 நடனகலைஞர்களின் பங்களிப்போடும், புனே நகரின் பாரம்பரிய மற்றும் நாட்டுபுற நடன கலைஞர்களின் நடன பங்களிப்போடும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

கலை இயக்குனர் நிதின் தேசாய் பிரம்மாண்டமான வடிவமைப்பில், நிஜவாழ்வில் காணும் ‘சனிவார் வாடாவிற்கு நிகரான ஒரு பிரம்மாண்டமான செட்டில், ராஜு கான் நடன அமைப்பில், இந்த பாடல் 13 நாட்களில் படமாக்கபட்டிருக்கிறது. புத்துணர்வூட்டும் வகையில் ஹிந்தி-மராத்தா நடையில் உருவாகியிருக்கும் இந்த பாடலில், முக்கிய கதாப்பாத்திரங்களான அர்ஜுன் கபூர், கிரிதி சாணன், மோனிஸ் பாஹ்ல், பத்மினி கோலாபுரே ஆகியோர் நடிக்க, இசை இரட்டையர்கள் அஜய்-அதுல் இசையில் உருவாகியிருக்கிறது.

பாரம்பரிய சுவைமிக்க, எழுச்சிமிக்க இந்த பாடலை குறித்து இசை இரட்டையர்கள் பேசும் போது, ‘இந்த பாடல் மராத்தா பேரரசின் செழுமையைக் கொண்டாடுகிறது. பாரம்பரிய சுவையுடன் அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் வயது வித்தியாசமின்றி, ரசனை பேதமின்றி ரசிக்கும் வகையில் இந்த பாடலை உருவாக்க விரும்பினோம். இதனை மனதில் வைத்தே, ‘மர்த் மராத்தா’ என்ற இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம். அது அனைவரையும் கவரும் என நம்புகிறோம்’.

மேலும், ‘இந்த எழுச்சி மிக்க பாடலை, மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இயக்குனர் அஷுதோஷ் படமாக்கி இருக்கும் விதம், மறந்துப் போன மராத்தா சாம்ராஜ்யத்தின் பெருமைகளை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது’.

இந்த பாடல் குறித்து இயக்குனர் அஷுதோஷ், ‘மர்த் மராத்தா பாடல் ஒரு எழுச்சிமிக்க பாடல். அது மராத்தா சாம்ராஜ்யத்தின் செழுமையை, அழகாய் எடுத்துரைக்கும் அதே நேரம், வீரமும் எழுச்சியுமிக்க பேஷ்வா மற்றும் மராத்தா சர்தார்களை பற்றியும், இன்னபிற இராணுவ படைப்பிரிவுகளை பற்றியும், இந்துக்கள், முகமதியர்கள் பிற இன-மத மக்களைப் பற்றியும் பேசுகிறது. இசை இரட்டையர்கள் இந்த பாடலை மிகவும் அருமையாக, நேர்த்தியாக பாரம்பரிய ரசனை பாராமல், அதே சமயம் உலகளாவிய வரவேற்பு கிடைக்கும் வண்ணம் அழகாக படைத்திருக்கிறார்கள். ராஜு கானின் நடன அமைப்பும் மிகவும் பிரம்மாதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது’

இந்த படம் 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் யுத்தத்தை, மையக்கருவாக கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படம்.

அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த வரலாற்றுப்படத்தை சுனிதா கோவர்கர் மற்றும் விஷன் வேர்ல்ட் சார்பாக ரோஹித் ஷேலட்கரும் இணைந்து தயாரிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கிரிதி சாணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் உலகமெங்கும் வெளியிடவிருக்கிறது. அஷுதோஷ் கோவர்கரின் எண்ணத்தில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதர்வா அடித்த அந்தர் பல்டி?; 6 கோடி ஏமாற்றியதாக மதியழகன் புகார்

அதர்வா அடித்த அந்தர் பல்டி?; 6 கோடி ஏமாற்றியதாக மதியழகன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rs 6 Crores Cheating case filed against Atharvaதயாரிப்பாளர் மதியழகன் என்பவர் நடிகர் அதர்வா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.6 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்… ‛‛கிக் ஆஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்தார் அதர்வா. இதனை அவுட்ரேட் முறையில் நான் வாங்கி விநியோகம் செய்தேன். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்தேன்.

ஆனால் படத்தை சொன்ன தேதியில் முடிக்கவில்லை ரிலீசும் தாமதம் ஆனது. இதனால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதர்வா மீது புகார் அளித்தேன். விஷால் தலைமையில் ஒரு கூட்டமும் நடைபெற்றது.

என் பக்கம் நியாயம் இருக்கவே எனக்கு ஒரு படம் செய்து தர சொல்ல அதற்கு அதர்வாவும் ஓகே சொன்னார். அந்த படத்திற்கும் அட்வான்ஸாக பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி படத்தில் நடிக்க இல்லை.

இதனால் எனக்கு ஏற்பட்ட ரூ.6 கோடி நஷ்டத்தை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்.

என புகார் மனுவில் கூறியுள்ளார் மதியழகன்.

Rs 6 Crores Cheating case filed against Atharva

More Articles
Follows