பாவனா விஷயத்தில் நடிகர் சங்கத்தின் ரியாக்சன் என்ன ?

பாவனா விஷயத்தில் நடிகர் சங்கத்தின் ரியாக்சன் என்ன ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

C5FyR35VMAA-28nசமீபத்தில் சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும் சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. நேற்றைக்கு முன்தினம் இரவு படபிடிப்பு முடித்து தன்னுடைய காரில் பயணம் செய்த போது ஓட்டுநரின் உதவியுடன் திடீரென இரண்டு, மூன்று நபர்கள் பாவனா அவர்களை கடத்தி சென்று பலவந்த படுத்தியதாக செய்தி வந்தது. நேற்று காலையில் நாங்கள் ஊடகங்கள் மூலமாக செய்தி கிடைத்தவுடன் இது உண்மையானதாக இருக்க கூடாது என்று தான் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பின்பு உடனடியாக மலையாள நடிகர் சங்கம் ஈடவேல பாபு அவர்களை தொடர்புகொண்டு நாங்கள் கேள்விப்பட்டு அறிந்த இந்த விஷயம் உண்மைதானா என்று பதட்டத்துடன் கேட்டோம் அதற்கு அவர் உண்மைதான் என்று கூறினார். நேற்று இரவே போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று அதன் விசாரணை தொடங்கிவிடும் நாம் சிறிது நேரம் காத்திருப்போம் என்று கூறினார். நேற்று மாலை வரை அவர்களை தொடர்புகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை அறிந்து வந்தோம். பின்பு உடனடியாக கேரளா முதலமைச்சர் அவர்களுக்கும், காவல்துறைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுதிருந்தோம்.
நேற்று மதியம் 3 மணியளவில் பாவனாவிடம் சிறிய விசாரணை நடந்தது அந்த விசாரணையின் முடிவுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உறுதிபடுத்தபட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக மூன்று நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் மேலும் அந்த பெண்ணின்னுடைய ஓட்டுனர் கைது செய்யபடுவார்.
எங்களின் வேண்டுகோள் அந்த பெண்ணை கடத்தியது பணத்திற்காகவா அல்லது முன்விரோதம் காரணமாகவா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா ?? கைதானவர்கள் இந்த பின்னணியில் மட்டும்தான் உள்ளார்களா அல்லது வேறு யாரும் உள்ளார்களா என்றும் அப்படி வேறு யாராவது இருந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிக பெயரிய அளவில் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.

பின்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இன்று தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளது. மேலும் நாம் பயணம் செய்யும் போது நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நடிகர், நடிகைகள் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. டிரைவரின் உதவியுடன் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் முடியும்.
ஒரு பயணத்திற்கு நாம் காரை வாடகைக்கு வாங்கும் போது அந்த டிரைவரின் அனைத்து பின்னணியும் அறிந்து கொள்ளவேண்டும். பெரியவர்கள் இந்த பாதுகாப்பு சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட முடியும் ஆனால் அதே சமயத்தில் சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ?? சமீபத்தில் எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்க்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்ற செய்தி வந்தது நாம் எண்ணி பார்க்கவேண்டிய விஷயம் நாம் வெறும் 30% மட்டும் படிப்பறிவு கொண்டு இருந்த போது இருந்த பெண்களுக்கான பாதுகாப்பு இன்று 80% படிப்பறிவு கொண்டு இருக்கும் போது இல்லை என்று எண்ணும் போது வருத்தமாக உள்ளது. ஆனால் அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இளம்பெண்களும், இளைஞர்களும் இரவோடு இரவாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட இரண்டு வகையில் நம் சமுகம் செயல்படுகிறது. இதற்கு காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்,

C5Fr6L6VUAAJiRH

வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakarthikeyanசிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் – ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான ‘ரெமோ’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிரிபார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து: “கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உழைப்பாளர்களின் மகிமையை பற்றி இந்த ‘வேலைக்காரன்’ எடுத்து சொல்லும்”

வேலைக்காரன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 25) ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தரமான கதை, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, சிறந்ததொரு பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த வேலைக்காரன் திரைப்படம், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகளை உள்ளடக்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh and menaka sureshபிரபல நடிகையான பாவனா, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது கார் டிரைவரால் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

இதுதொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாவனாவுக்கு ஏற்பட்ட இச்செயலை கண்டித்து மலையாள திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு தொடர்பான ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே டிரைவர் தன் மனைவி மேனகா சுரேஷையும் கடத்த முயற்சி செய்தாராம்.

ஆனால் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayதெறி, பைரவா படங்களையடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிமாக விஜய் 61 என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அங்கு விஜய், நித்யா காட்சிகளை படமாக்கி வருகிறாராம் அட்லி.

பிப்ரவரி இறுதிவரை இந்த சூட்டிங் அங்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Dhivya Dharshiniமுன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படம் 2017 ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் டிடி (என்ற) திவ்யதர்ஷினியை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Dhanush ‏@dhanushkraja
Filmed @DhivyaDharshini cameo in #powerpaandi. She performed with so much ease and confidence. Very happy and surprised. Superb DD.

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajithநடிகர்களை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது ரத்ததானம், அன்னதானம், கல்வி உதவிக் தொகை ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நம் நாட்டின் வளத்தை அழிக்கும், சீமைக்கருவேல மரங்களை பல பகுதிகளில் இளைஞர்களை வேரோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதை தற்போது அஜித் ரசிகர்களும் செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இப்பணியை அஜித் ரசிகர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

More Articles
Follows