தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் மலையாள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணையில் முன்னணி நடிகரான திலீப்பை கேரள போலீசார் கைது செய்தனர்.
இதனால் சில நாட்கள் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
திலீப் கைது செய்யப்பட்டதும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவால் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
எனவே அவருக்கு பதிலாக மோகன்லால் பதவியேற்றார்.
இதனையடுத்து நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்தார் மோகன்லால்.
மோகன்லாலின் இந்த முடிவுக்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சிலர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
நடிகைகளின் எதிர்ப்பு வலுத்து வருவதால் நடிகர் சங்கத்தில் இருந்து தானே விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்.
இதனை மோகன்லாலும் ஏற்றுக் கொண்டார்.
Dileep Removed From Malayalam Film Body Says Chief Mohanlal