தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
இவர் தற்போது கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் உள்ளார்.
இந்நிலையில் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனவே இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதற்கு முன்பே கடந்த ஜூலை 15-ம் தேதியும அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.