தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் அடுத்த ஆலுவா கிளைச்சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே திலீப் சார்பில் ஆஜரான வழக்கீல், திலீப்பின் திரையுலக பயணத்தை சீர்குலைக்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்க கேட்டார்.
ஆனால், இதற்கு அரசு தரப்பு வக்கீல், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் இன்னும் கிடைக்காததாலும், திலீப்பிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.
Bhavana assault case Kerala high court rejects actor Dileeps bail plea