தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இருவரும் கல்லுாரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களிடையே கலந்துரையாடி அரசியல் பேசி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் மத்திய – மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பேசியிருந்தனர்.
இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர்.
இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். மாணவர்களின் மனப்பான்மை பாதிக்கப்படும்.
கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் அரசியல் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை, மாணவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறான விழாக்களுக்கு, கல்லுாரிகள் அனுமதி தரக்கூடாது. இதுகுறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.