தும்பா படப்பிடிப்பு நிறைவு

தும்பா படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, “தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும் படங்களை ரசிப்பவர்கள். இயக்குனர் ஹரிஷ்ராம் எங்களுக்கு கதையை விவரிக்கும் போது, நாங்கள் மிகவும் ரசித்தோம், ஆனால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது தான், அந்த அடர்ந்த காடுகளில் படம் பிடிக்க ஒட்டுமொத்த குழுவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்தோம். சில இடங்களில், படப்பிடிப்பு நடத்த மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் அதையும் தாண்டி படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். வாகமோன், இடுக்கி, பாலக்காடு, சென்னை மற்றும் குமிலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். திரையரங்குகளில் பார்வையாளர்களால் வெறுமனே படத்தை மட்டும் ரசிக்காமல், இந்த இடங்களின் அழகிய காட்சிகளையும் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது உறுதி” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த படத்தின் அறிமுக வீடியோ மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘புதுசாட்டம்’ பாடல், YouTubeல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. மற்ற பாடல்களுக்கு விவேக் மெர்வின் & சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப்பயிற்சி), ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.

யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’!

யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New ProjectPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.

மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெயில்” என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்..

கொலையானது யார்?? அந்த கொலையை செய்தது யார்???

இதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ எப்படி வெளியே வருகிறார்கள்??

இதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.

இடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகரும்.

ஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.

பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிட் செய்கிறார் எஸ். என். பாசில்.

சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது “காக்டெய்ல்” குழு.

மணிரத்னம் கதை வசனத்தில் விக்ரம்பிரபு நாயகனாகிறார்

மணிரத்னம் கதை வசனத்தில் விக்ரம்பிரபு நாயகனாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இருவர்,நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்றுவெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவரது ஜோடியாக
மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே “படை வீரன்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.”96″புகழ் கோவிந்த் வசந்த இசை அமைக்க “அபியும் நானும்” படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரீத்தா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய,கலையை அமரன் அமைக்க,ஏகா லகானி காஸ்ட்டியும் டிசைன் பொறுப்பு ஏற்றுள்ளார்.ஜுலை முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

சலீம் பட இயக்குனர் படத்தில் சசி குமார்

சலீம் பட இயக்குனர் படத்தில் சசி குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தீவிரம் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவை தான் சசிகுமாரை பற்றி விவரிக்கின்றன. அவர் குடும்பம், உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் விதம் தான் அவரின் இந்த புகழுக்கு காரணமாக அமைந்தவை. இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அவரின் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. இந்நிலையில் கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத “தயாரிப்பு எண் 3” படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சலீம் புகழ் நிர்மல் குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் இது குறித்து கூறும்போது, “எல்லா தரப்பிலுமே சசிகுமார் மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். காரணம் அவருடைய திரைப்படங்கள் எப்போதும் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு அழகான ஒரு பரிமாணத்தை அளிக்கும். பத்து வருடங்களாக மேல் நடிகராக பயணித்து வரும் சசிகுமார் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை கொடுக்கும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார்.

இந்த படத்தில் அவர் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் எப்போதும் அவரை எப்படி விரும்பி பார்க்கிறார்களோ, அப்படியே இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார். இயக்குனர் நிர்மல்குமார் மிகச்சிறந்த கதை சொல்லி. இது ஒன்றும் உயர்த்தி மதிப்பிடப்பட்டதல்ல, அவர் ஏற்கனவே முந்தைய படமான் “சலீம்” படத்தின் மூலம் திறமையை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை அவர் என்னிடம் விவரிக்கும் போதே அதில் இருந்த தனித்துவத்தை நான் உணர்கிறேன்” என்றார்.

இன்று காலை எளிய சடங்குகளுடன் துவங்கப்பட்ட இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம் – ஆர்.ஜே விக்னேஷ் காந்த்

மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம் – ஆர்.ஜே விக்னேஷ் காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,

விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,

இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.

அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,

“ஞானவேல் ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.

ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,

மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஜால் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஜால் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி ” என்றார்.

இசை அமைப்பாளர் ஜான் ரோல்டன் பேசியதாவது,

“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,

“ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். ” என்றார்.

படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,

“மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்

படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது,

“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஜான்ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,

“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஜான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,

“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஜான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார்.

மெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது

இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா.? தனுஷுக்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர்

இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா.? தனுஷுக்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush fans slams their Hero and printed Controversial Posterநடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட தனுஷுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவரது ரசிகர்களே அவருக்கு எதிராக போஸ்டர்கள் அடித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில்…

இவனெல்லாம் ஹீரோவா? இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா? என்று ஆரம்பகாலத்தில் வந்த விமர்சனங்களைத்தாண்டி நின்றவர்கள் நாங்கள். ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்?

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள் என் ரசிகர்கள். அவர்களை எப்போதும் கைவிடமாட்டேன் என்று சொன்னாயே தலைவா? ஆனால் இன்றைக்கு உழைத்த தலைவர்களை மறந்து விட்டாயே தலைவா?

நாங்களா தனுஷ்க்கு பேனர் கட் வைக்க சொன்னோம் என்று பேசிய டச்சப்மேன் ராஜா மீது நடவடிக்கை எடு தலைவா? இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என்று அந்த போஸ்டரில் அடித்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans slams their Hero and printed Controversial Poster

dhanush fans poster

More Articles
Follows