தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018ல் ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத கன மழையை கேரளா சந்தித்தது.
இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகள் உடமைகளை இழந்து தவித்தனர்.
அப்போது கேரளா மீண்டு வர உலகெங்கும் இருந்து பல நிதியுதவிகள் வழங்கப்பட்டன. ஒரு வழியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்தனர் மலையாளிகள்.
தமிழில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கினர்.
அப்போது கேரளாவில் அதிகளவில் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்யும் ரூ.70 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நம் தளத்தில் கடந்த 2018ல் வெளியான செய்திக்கான லிங்க் இது…
https://www.filmistreet.com/cinema-news/actor-vijay-donates-rs-70-lakhs-to-kerala-flood-relief/
கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் )
இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல ஆயிரம் சினிமா தொழிலாளர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் விஜய் இதுவரை கொரோனா தொடர்பான ஒரு விழிப்புணர்வு அறிக்கை கூட விடவில்லை.
தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சினிமாவுக்கும் சரி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் சரி இதுவரை விஜய் ரூ. 1 கூட வழங்கவில்லை.
அவர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்பது அவர்களது ரசிகர்களையே குழப்பமடைய வைத்துள்ளது.
சில விஜய் ரசிகர்களால் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் (கொரோனா) நிவாரண நிதிக்கு நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே நிதி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர்கள் நடிகையர் பெப்சி தொழிலாளர்களுக்கு வாரி கொடுத்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Thalapathy fans upset with Vijays silence in Corona relief fund