தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவான ’ஜெய்பீம்’ படம் கடந்தாண்டு 2021ல் ஓடிடி தளத்தில் ரிலீசானது. இது மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் உலகமெங்கும் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கடலூர் மாவட்டத்தில் இன்று ரிலீசாகுமா? என ரசிகர்கள் புரியாமல் தவித்தனர்.

ஆனால் இன்று காலை 7 மணி காட்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் திரையரங்கின் உள்ளே சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Suriya’s Etharkkum Thunindhavan released in cuddalore with police protection

அஜய் ஞானமுத்து இல்லாமல் உருவாகிறதா ‘டிமான்ட்டி காலனி பார்ட்-2’..?

அஜய் ஞானமுத்து இல்லாமல் உருவாகிறதா ‘டிமான்ட்டி காலனி பார்ட்-2’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015ல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பேய் படம் டிமான்ட்டி காலனி.

இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி நடித்திருந்தார்.

இதில்தான் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமானார்.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதிலும் அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் ஆனால் இயக்குனர் அஜய் ஞானமுத்து இல்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Arul Nithi plans for Demonte Colony part 2

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த படம் ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.

அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைய சிம்புவே காரணம் என புகார் அளித்து அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார்.

இதனையடுத்து தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை கூறி வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்து இருந்தார் சிம்பு.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரையும் எதிர்மனுதாரர் என சேர்ந்திருந்தார் நடிகர் சிம்பு.

இந்த வழக்கு இன்று மார்ச் 9ல் விசாரணைக்கு வந்தது.

ஆனால் எதிர்பாராத தீர்ப்பை கோர்ட் வழங்கியள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவில்லை என்பதால் ஒரு லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது கோர்ட்.

Court fined producer council in STR case

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும் அதை விட பிசியான நடிகராகவும் உள்ளார். மேலும் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சங்கர் என்பவர் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இசையமைக்க உள்ளார்.

இதற்கு ’கள்வன்’ என டைட்டில் வைக்கப்பட உள்ளதாம்.

முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV & Bharathi Raja joins for a new film

பிரபாஸ் – ஸ்ருதி ஜோடி உடன் இணையும் ‘லூசிபர்’ டைரக்டர்

பிரபாஸ் – ஸ்ருதி ஜோடி உடன் இணையும் ‘லூசிபர்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு பிரபாஸின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால் படங்களும் பான் இந்தியா படமாக உருவாகிறது.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை தொடுகிறது.

நாளை மறுநாள் மார்ச் 11ல் பிரபாஸ் பூஜா ஹக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் வெளியாகவுள்ளது.

தற்போது பிரபாஸின் அடுத்த படமான ’சலார்’ என்ற படத்தில் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் இந்த படம் தயாராகி வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள ஹீரோவான பிரித்விராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்தான் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ மற்றும் ‘டாடி பிரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘சலார்’ படம் இரண்டு பகுதிகளாக உருவாகி வருவதும் ஒவ்வொன்றும் ரூ. 150 கோடி பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lucifer director joins Prabhas in salaar

தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது நேரடியாக மலையாள படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்பட புரமோஷன் பணிகளுக்காக நேற்று கேரளா சென்றிருந்தார்.

இந்த புரமோஷன் விழாவில்… மலையாள இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதை சொன்னதாகவும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்.

இந்த படம் உறுதியானால் இது சூர்யா நடிக்கும் நேரடி மலையாள படமாக அமையும்.

தற்போது விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகிறது.

அதுபோல் தனுஷ் நடிக்கும் SIR ’வாத்தி’ படமும் மற்றும் சிவகார்த்திகேயனின் 20வது படமும் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் விஜய்சேதுபதியும் நேரடி தெலுங்கு படம், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

தமிழ் நடிகர்கள் மற்ற மாநில மொழி படங்களில் கவனம் செலுத்தி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya to work in Malayalam film

More Articles
Follows