தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அகரம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா.
அவர்களுக்கு உதவிட நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்று தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?
இதனால் நிறைய குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடும் என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
தற்போது 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பழைய நடைமுறையே தொடரும்’ என்று பள்ளிக் கல்வித்துறை எனவும் அறிவித்தது.
இந்த விவகாரம் குறித்த நடிகர் சூர்யா கூறியதாவது…
‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என கூறியுள்ளார்.
Suriya welcomes TN Govt order about 5 and 8 std Public exam
#PublicExam pic.twitter.com/rwWCoMcZA0
— Suriya Sivakumar (@Suriya_offl) February 4, 2020