தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தல தளபதி நடிகர்களிடையே பலத்த போட்டி இருந்தாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன் இடத்தை தக்க வைத்து வருபவர் சூர்யா.
பொது வாழ்க்கையில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து தன் அகரம் பவுண்டேசன் மூலம் படிக்க உதவி செய்தும் வருகிறார்.
தன்னைச் சார்ந்த சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் சூர்யா, தற்போது தன் பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒரு நல்ல முடிவொன்றை எடுத்துள்ளார்.
இது குறித்து சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத்தின் இணை-தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது…
தயாரிப்பாளர்களின் நலன் கருதி, தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாக சூர்யாஅறிவித்துள்ளார்” என்று கூறினார்.
இதனால் தயாரிப்பாளர்களின் பட்ஜெட் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. இதுபோன்று டாப் ஹீரோ, ஹீரோயின்கள் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.