தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர்.
தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர்
மாண்புமிகு எம்.அப்பாவு எம்.எல் .ஏ
தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் mla,
மாண்புமிகு பி.கே.சேகர் பாபு mla,
மாண்புமிகு டி.மனோ தங்கராஜ் mla, டைரக்டர் ஹரி தந்தை கோபால கிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.
மற்றும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர்,
நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவர்களை டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி வரவேற்றனர்.
முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.
இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும்.
குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திருமதி ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது.
மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான் இப்பொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சென்னை சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.
கூடுதல் தகவல்…
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘அருவா’ என்ற படத்தின் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே ‘அருவா’ படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்து தயாரித்த ‘சூரரை போற்று’ படம் ஓடிடி-யில் வெளியானபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் இயக்குனர் ஹரி. உங்கள் உயர்வுக்கு காரணமான தியேட்டர்களை மறந்து விடாதீர்கள் என கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் அவர்கள் தற்போது சந்தித்து இருப்பதால் விரைவில் இவர்களின் கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா மற்றும் ஹரி இணைந்த ‘வேல்’, சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Suriya opened Hari – Preetha’s Good Luck Studios
–