தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் கீழடி கிராமம் உள்ளது.
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது.
இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு அகழாய்வு செய்து, ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலக் குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மார்ச் மாதம் 6-ம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
இன்று ஏப்ரல் 1-ம் தேதி் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடிகர் சிவகுமார் அவரது மகன் நடிகர் சூர்யா, மருமகள் நடிகை ஜோதிகா மற்றும் அவர்களது உறவினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமிதம்! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.
தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.. அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என பதிவிட்டுள்ளார்.” என நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் வருகையை முன்னிட்டு அங்கு பார்வையிட வந்த பொதுமக்களை பல மணி நேரம் காவல்துறை காக்க வைத்ததாக கூறப்படுகிறது. ஒரு தனிப்பட்ட நபருக்காக எங்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? என அங்கு வந்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் காவல்துறை யாருக்கு வேலை செய்கிறது எனவும் மக்கள் கேட்கின்றனர்.
உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமதானா.?
Suriya Jyothika family visits Keeladi museum made controversy