தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் சூரியா 42 படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் ஆரம்பமாக உள்ளது.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இவர் இதற்கு முன்பே சூர்யாவின் ஆறு சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் நாயகியாக திஷா பாண்டே பணிபுரிவார் என கூறப்படுகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் அதன் பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கதையை அதிநாராயணன் எழுத வசனங்களை மதன் காக்கி எழுதுகிறார் கலைப் பணிகளை மிலன் கவனிக்க சண்டை பயிற்சியை சுப்ரீம் சுந்தர் கவனிக்கிறார்.
Suriya 42 Shoot Starts Next Week