தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்.ஜி.கே’ படத்தை முடித்துவிட்டு தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இது சூர்யாவின் 37வது படமாக உருவாகி வருகிறது.
ஆனால் என்ஜிகே படம் என்னானது? எப்போது ரிலீஸ்? என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனையடுத்து ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து ‘சூர்யா 39’வது படத்தை ஹரி இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹரி – சூர்யா கூட்டணியில் இதுவரை ‘வேலு’, ‘ஆறு’, ‘சிங்கம் 1, 2, 3’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.