விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஒரு பிரபல ஹீரோ படத்தில் மற்றொரு பிரபல ஹீரோ நடிக்க தயங்குவார்.

ஆனால் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் அந்தந்த மாநில ஸ்டார்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்கள்.

இதனால் பிரபலமான நாயகனின் தமிழ் படத்தில் நடிக்க கேட்டால் அவர்கள் உடனே ஓகேவும் சொல்லிவிடுவார்கள்.

விஜய் நடித்த ஜில்லா படத்திலும் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் மோகன்லால் நடித்திருந்தார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான கமலின் உன்னை போல் ஒருவன் படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கவுள்ள அஜித் 61 படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

விரைவில் இதுபற்றிய அறிவிப்பு தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super Star joins with Ajith Kumar for his new film?

உங்க வாழ்க்கையை மாற்றப் போகும் 2 நிமிடம்..; சுசி கணேசன் தேடும் ஹீரோ நீங்கதானே.?

உங்க வாழ்க்கையை மாற்றப் போகும் 2 நிமிடம்..; சுசி கணேசன் தேடும் ஹீரோ நீங்கதானே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஜனவரி 29ல் வெளியிடப்பட்டது .

சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . அதற்கான விடை நேற்று (ஜனவரி 29) நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது

தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது…

“ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் .

இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் .

இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது .

இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது…

“பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்

ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com வெப்சைட் அல்லது 4V MAXTV -யூ டியூப் மூலம் இரண்டு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் .

இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி உடற்பயிற்சி அளிக்கப்படும் .

மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 பேர் ,
12 வாரங்கள் நடக்கும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 ” கலந்து கொளவார்கள் .

இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனல் அறிவிக்கப்பட இருக்கிறது .

நடிகை ஸ்னேகாவை
பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும் நடிகர் ப்ரசன்னாவை பிரபலமான டி வி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன் , சோசியல் மீடியாவின் வளர்ச்சிக்கேற்ப ” வருங்கால சூப்பர் ஹீரோ” வின் மூலம் கதா நாயகன் தேடும் முயற்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .

“அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ” என்றார் சுசி கணேசன் .

தயாரிப்பாளர் மஞ்சரி “பார்க்கும் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப சராசரி மனிதனுக்கு கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குனர் சுசி கணேசன் முயற்சி பெரும் வெற்றி பெறும் .

இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ஹிந்தியிலும் தெலுங்கு கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன. இந்த வருடத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந் நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் சுசி கனேசன் வெற்றி பெறுவார் .
நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் .

வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப்படம் தயாரிக்கப்படும்.

Bullet19 என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசிகணேசன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு , முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது . அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் “என்றார்.

Director Susi Ganesan searches for Next Super Star 2022

https://www.4vmaxtv.com/?a=11

https://www.youtube.com/channel/UCmrWLfqeF2SqhwGcrOWh_Jg

ராஜேஷ் இயக்கத்தில் இணையும் ஜோடி சாந்தனு-ஹன்சிகா

ராஜேஷ் இயக்கத்தில் இணையும் ஜோடி சாந்தனு-ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்எம்எஸ்.. ஓகே ஓகே, பாஸ் எ பாஸ்கரன் உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கி ரசிகர்கள் குஷியாக்கியவர் எம். ராஜேஷ்.

ஆனால் அதன்பின்னர் இவர் இயக்கிய ஆல்இன்ஆல் அழகுராஜா, கடவுள் இருக்கான் குமாரு, VSOP. மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை தழுவியது.

அதன்பின்னர் ராஜேஷ் பற்றிய செய்திகள் இல்லை.

இந்த நிலையில் நிலையில் தற்போது சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம் எம். ராஜேஷ்.

இதில் நாயகிகளாக ஹன்சிகா மற்றும் ஜனனி ஐயர் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் லக்கி நாராயணன் நடித்து வருகிறாராம்.

Shanthanu and Hansika joins for a new film

மீண்டும் தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டும் சிவகார்த்திகேயன்

மீண்டும் தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதால் கோலிவுட் ஹீரோக்களின் கவனம் தற்போது தெலுங்கு பக்கம் அதிகளவில் திரும்பியுள்ளது.

ஏற்கெனவே தெலுங்கில் ரஜினி, விஷால், சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகியோரின் படங்களுக்கு நல்ல மார்கெட் இருந்து வருகிறது.

தற்போது முதன்முறையாக விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் இந்த படங்கள் தமிழிலும் தயாராகி வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்குனம் சார் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

தில் ராஜீ தயாரிப்பல் வம்சி இயக்கும் விஜய் 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இவர்களை தொடர்ந்து அனுதீப் இயக்கவுள்ள படத்தல் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்க தயாராகிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கெனவே நாகார்ஜுனா – நாகசைதன்யா இணைந்து நடித்த பங்கார் ராஜு என்ற படத்தை இயக்கியவர் ஆவார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிறுவனம் ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan signs one more telugu film?

தனுஷின் ‘வாத்தி’ பட நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்

தனுஷின் ‘வாத்தி’ பட நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது.

இதனையடுத்து தெலுங்கில் சார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதே படம் தமிழில் வாத்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

தெலுங்கில் தோலி ப்ரேமா என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் எஸ் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பவன் கல்யானுடன் சம்யுக்தா மேனன் இணைந்துள்ள ‘பீம்லா நாயக்’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

மேலும் விரைவில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகி[யிருக்கிறாராம் சம்யுக்தா மேனன்.

Actress Samyuktha Menon gets more cinema chances

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம்

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு புறம் தமிழக அரசியலில் தனக்கு அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர்.

தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தன் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட அனுமதித்துள்ளார் நடிகர் விஜய்.

தன் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை கொடுக்க மறுத்துள்ளது ஆணையம்.

அந்த விளக்கத்தில்.. “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

எனவே பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Election Commission refused to give auto symbol for VMI

More Articles
Follows