தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்ற செய்திகள் வந்துள்ளன.
இதில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிப்பார் எனவும் வந்த செய்திகள் பார்த்தோம்.
இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் Franka peseta என்ற நிகழ்ச்சியை நிவேதிதா, சங்கீதா என்ற பெண்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அவர்கள் இது குறித்து பேசும்போது…
சிங்கம் படத்துல அனுஷ்காவுடன் நடிக்கும்போதே சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். அமிதாப்புடன் எப்படி நடிப்பார். ஸ்டூல் போட்டுப்பாரா?
உட்கார்ந்துக்கிட்டே நடிக்க வேண்டியதுதான் என சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியுள்ளனர்.
இதற்கு சூர்யா ரசிகர்கள் முதல் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் விஷால், இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த பெண்களை என்ன சொல்ல…? எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு உயருகிறோம் என்பதுதான் முக்கியம் என்ற சூர்யா சொன்ன டயலாக்குதான் தற்போது நினைவுக்கு வருகிறது…