அவர் நட்சத்திரத்தில பொண்ணு பாருங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன்.. – சிம்பு

அவர் நட்சத்திரத்தில பொண்ணு பாருங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன்.. – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.

கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, …

“இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. உக்கம்சந்த், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆதரவுடன் எந்தவித தடங்கலும் இல்லாமல் படத்தை முடித்து விட்டோம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்..நாதன் இந்திப்படம் போல காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட்.. ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,…

“சிம்புவை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்வார்கள்.. ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு.. ஆனால் அவை எல்லாமே எனக்கு பிடிக்கும்.. இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்து போய் நிற்கிறேன். அதேசமயம், வெங்கட்பிரபு நீதான் பெரியவனா..? உனக்கு போட்டியாக நானும் மீண்டும் படமெடுப்பேன்” என ஜாலியாக சவால் விடுத்தார்.

நடிகர் ஒய்.’ஜி.மகேந்திரன் பேசும்போது,….

“இன்று திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இரண்டே இரண்டு பேர் தான் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள். ஒருவர் கமல்.. இன்னொருவர் சிம்பு… அந்த அளவு சினிமா பற்றியே நினைக்க கூடிய ஒருவர் தான் சிம்பு.. இந்தப்படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க.. ஆமா பிரச்சனை பண்றார்.. சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு.. அதான் பிரச்சனைன்னு சொன்னேன்..

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சுமைதாங்கி அப்படின்னா, வெங்கட் பிரபு இயக்குனர்களில் எம்.எஸ்.தோனின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா பிரச்சனைகளையும் கூலாக கையாளுவார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது. எனக்கு இன்றைக்கே ரிலீஸ் தேதியாக இருக்க கூடாதா என ஏக்கமாக இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது,…

“நாங்கள் பணக்காரன் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னபையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, வாங்க நாமளும் பார்த்துட்டு வரலாம் என கூறினார்.

அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான் என அப்போதே கணித்து பாராட்டினார்.

நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,…

“இந்தப்படத்தின் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் மேற்பார்வை பொறுப்பை சுரேஷ் காமாட்சி சில நாட்கள் என்னிடம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒய்வு எடுக்கும்போது நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்து தூங்குவதை பார்த்து, சிம்பு தனது நாற்காலியை கொடுத்து என்னை வசதியாக தூங்க வழி செய்து கொடுத்தார். பெரியவர்களை மதிக்கும் குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது…

, “எல்லோருக்கும் பிடித்த நடிகர் சிம்பு.. பிடிக்காது என்று சொல்வதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு ரசிகனாக நான் சொல்வதெல்லாம், நீங்க எப்ப வேணா வாங்க, எப்படி வேணா வாங்க,.. ஆனா அடிக்கடி வாங்க.. அதேமாதிரி இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவை நவீன நம்பியார் என இனிமேல் சொல்லலாம்.

எப்படி நம்பியார் இல்லாமல் படங்களே இல்லை என முன்பு ஒரு நிலை இருந்ததோ அதேபோன்ற ஒரு காலகட்டத்தை எஸ்ஜே.சூர்யா இப்போது கொண்டுவந்து விட்டார்” என்றார்.

நடிகர் எஸ்.ஜே/சூர்யா பேசும்போது,…

“நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன்.. அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ்.. எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் என்னன்னா அவர் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்..

அவர் பிரச்சனைகள்ல சிக்கி கஷ்டப்பட்டா நானும் கஷ்டப்படுவேன். இப்ப அவர் நல்லா இருக்கார்.. நானும் நல்ல இருக்கேன்..

சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு.. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்துக்கு எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டார்..

ஒரே நேரத்துல பத்து படம் பண்ணுனா எவ்வளவு கவனம் இருக்குமோ அதை இந்த ஒரே படத்துல வெங்கட் பிரபு செஞ்சிருக்கார். அந்த அளவுக்கு பவர்புல்லான ஸ்கிரிப்ட் இது. இனி அடுத்து அவர் படம் பண்ணுனா அது பான் இந்தியா படமா தான் டைரக்ட் பண்ணனும்.

இந்தப்படம் டப்பிங் பண்ணும்போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசியே எனக்கு கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் வந்துச்சு. போதாக்குறைக்கு நானே தெலுங்குல டப்பிங் பேசுறேன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன்.. டப்பிங் முடிச்சுட்டு படத்தை பார்த்தப்ப தான் தோணுச்சு.. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்கு தான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்.

யுவனோட பின்னணி இசை பத்தி சொல்லனும்னா என்னோட பொம்மை படத்திற்கு அவர் மியூசிக் போட்டிருந்ததை பார்த்துட்டு கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்ன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.. வாசுகி பாஸ்கர் கூட ஒரு தடவ சொல்லும்போது, மங்காத்தா படத்துல யுவன் அற்புதமான தீம் மியூசிக் போட்டிருந்தாலும், அதையே பல இடங்கள்ல காபி பேஸ்ட் பண்ணிட்டார். ஆனா இந்த மாநாடு படத்துல ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனி ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கார் அப்படின்னு சொன்னாங்க.. அப்படி ஒரு கலைஞனா அவரை விதவிதமா பண்ற அளவுக்கு இந்தப்படம் ஈர்த்திருக்கு. ” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,….

“நானும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து பிரியாணி படம் பண்ணிய சமயத்துலே இந்த கதையை அவர் என்னிடம் சொல்லிருக்கார்.. சொல்லப்போனா இந்தப்படத்தோட கதையில இருந்து கிளைக்கதையா தான் பிரியாணி உருவானது.

சிம்பு சார் இந்தப்படத்துல நான் வந்துட்டேனு ஒரு வசனம் பேசுறார். அவர் இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்.. வெற்றி மட்டும் அவருக்கு ரிப்பீட் ஆகிட்டே இருக்கட்டும்” என்றார்.

யுவன் சங்கர் ராஜா பேசும்போது,…

“வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே எதற்கு எப்படி இசையமைக்க போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது.. காரணம் டைம் லூப்பில் திரும்ப திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது. இதில் நீங்க வழக்கமாக பார்க்கும் சிம்புவை பார்க்க முடியாது.” என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது,….

“நான் சென்னை-28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு. இந்தப்படத்தோட ஒன்லைன் மட்டும் தான் சிம்புகிட்ட சொன்னேன்..

ஆனால் அதுல வர்ற ஹீரோவோட அப்துல் காலிக் அப்படிங்கிற பேரு அவருக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. என் படத்துக்கு யுவன் ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவார்னு சொன்னாங்க.. ஆனா சிம்பு படத்துக்கு தான் யுவன் ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவாரு” என்றார்.

நாயகன் சிம்பு பேசும்போது,….

“என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார்.

இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு.. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு,.. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம்.

இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம்.

யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு..

இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க..

ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார்.. இந்தப்படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லகிட்டே இருந்தேன்..இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு..

என்றவர் திடீரென கண் கலங்கினார்..

“என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசிய சிம்பு, அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை நிறைவு செய்தார்.

STR talks about his marriage at Maanaadu pre release event

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டுக்கு சென்ற விஷால்..

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டுக்கு சென்ற விஷால்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் மாதம் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் திடீரென காலமானார்.

அப்போதே அவர் விட்டு சென்ற சமூக கல்விப்பணிகளை தான் தொடர்வேன் என நடிகர் விஷால் அறிவித்தார்.

இந்த நிலையில் நவம்பர் 17ஆம் தேதி கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது-

இதில் விஷால் கலந்துக் கொண்டார்.

இதனிடையில் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற விஷால் அவருடைய குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் தன் ட்விட்டரில்.. ”புனித் நம்மோடு இல்லை என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் விஷால்.

Vishal visits Punith Rajkumar house

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளதாக கூறப்பபடுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது-

இதற்கு முன்பே விஜய் நடித்த ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களை பிரபுதேவா தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Prabhu Deva joins for Thalapathy 66

ராசாக்கண்ணு மனைவியிடம் நிதியளித்து வாக்குறுதி கொடுத்த லாரன்ஸ்

ராசாக்கண்ணு மனைவியிடம் நிதியளித்து வாக்குறுதி கொடுத்த லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ படம் 1995ல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதில் நிஜ கேரக்டராக காண்பிக்கப்பட்ட ராசாக்கண்ணு விவாகாரம் தற்போதைய தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகியுள்ளது.

ராசாக்கண்ணு மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்குக்கால் அவர் காவல்நிலையத்திலேயே சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நிஜ ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியை சென்னையில் பல பிரபலங்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர் சூர்யா 15 லட்சம் அவரின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான ஆதாரங்களை பார்வதியிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரிடம் ஒரு தொகையை கொடுத்துள்ளார்.

மேலும் விரைவில் சொந்தமாக வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்து திரும்பியுள்ளார் லாரன்ஸ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்.. “முதலில் இந்த படத்தை எடுத்த சூர்யா, ஜோதிகாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இப்படத்தை எடுக்க வில்லையென்றால் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது” என தெரிவித்தார் ராகவா லாரனஸ்.

Raghava Lawrence pays surprise visit to Parvathi house

சிலம்பரசன் படத்தில் இணைந்த ‘தி பேமிலி மேன்’ சீரிஸ் நடிகர்

சிலம்பரசன் படத்தில் இணைந்த ‘தி பேமிலி மேன்’ சீரிஸ் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

சிம்புவின் ஜோடியாக கயட் லோஹர் என்பவர் நடிக்க ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவரை பார்க்காத சிம்புவை இந்த படத்தில் பார்க்கலாம் என படக்குழுவினரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வாக்கை நிரூபிக்கும் வகையில் சிம்புவின் தோற்றமும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

‘பாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் 5’, ‘தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் என்பவரும் இந்த படக்குழுவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகர் நீராஜ் மாதவ் என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ‘த்ரிஷ்யம்’, ‘சார்லி’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Family man web series actor joins STR film

தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு சூர்யா என்ன சொன்னார் தெரியுமா.?

தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு சூர்யா என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த படம் ஜெய்பீம்.

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்.

ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வருகின்றனர். இப்படியொரு படத்தை சமீபத்தில் நாங்கள் பார்க்கவில்லை எனவும் தங்கள் பாராட்டினை பக்க பக்கமாக எழுதி வருகின்றனர்.

பிரபலங்களாலும் மக்களாலும் இந்த படம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாமக கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக புகார்களையும் குற்றச்சாட்டுக்களையும் தினம் தினம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு சில பிரபலங்கள் குரல் கொடுத்த தொடங்கியுள்ளனர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அமீர், நடிகர் சத்யராஜ், உள்ளிட்டோர் ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”அன்புள்ள அனைவருக்கும், ‘ஜெய் பீம்’ படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அன்பு திக்குமுக்காடச் செய்கிறது. இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நீங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த நம்பிக்கைக்கும், உத்வேகத்துக்கும் நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. எங்களோடு நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்”.

எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.

Surya thanks fans ‘for standing by us’ amid police protection at his Chennai house

More Articles
Follows