ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் மெகா பட்ஜெட் படம்

ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் மெகா பட்ஜெட் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli and Mahesh Babu to team up for mega project பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து உலக சினிமாவையே இந்தியா பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி.

இவர் தற்போது ராம் சரண் மற்றும் ஜீனியர் என்டிஆர் நடிக்கும் RRR படத்தை இயக்கி வருகிறார்.

அதாவது ஒரு ஹீரோ கேரக்டரை நீரை போன்றும் மற்றொரு கேரக்டரை நெருப்பை போன்றும் உருவாக்கியுள்ளார்.

இவர்களுடன் ஆலியா பட் அஜய்தேவ்கன் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

RRR படத்தின் வேலைகள் முடித்துவிட்டு பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயணனின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.

அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிப்பார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ராஜமௌலிக்கு சரி.. மகேஷ் பாபுக்கும் சரி வணிக வியாபாரம் மிகப்பெரிய அளவில் உள்ளது. ஓப்பனிங்கும் பெரியளவில் இருக்கும். எனவே படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.

SS Rajamouli and Mahesh Babu to team up for mega project

பன்னாட்டு கப்பல்கள் நம் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி? – கமல்

பன்னாட்டு கப்பல்கள் நம் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan question about Fishing ant its ban period கொரோனா ஊரடங்கு உத்தரவு சரியாக திட்டமிடப்படவில்லை என மோடியை கண்டித்து அடிக்கடி கருத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

மேலும் பால்கனி அரசு அடித்தட்டு மக்கள் நலனை கண்டுக் கொள்ளவில்லை எனவும் சாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் என்று இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதித்துவிட்டு இந்திய கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்கள் மீன் பிடிக்க அனுமதித்தது ஏன் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில்…

“ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி?” என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்.

Kamalhassan question about Fishing ant its ban period

கொரோனாவுக்காக சாலையில் இறங்கிய சசிகுமார்; சபாஷ் சார் (வீடியோ)

கொரோனாவுக்காக சாலையில் இறங்கிய சசிகுமார்; சபாஷ் சார் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sasikumar on road to create Corona awareness கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சட்டத்தை மதிக்காமல் பலர் சாலையில் சுற்றி திரிகின்றனர்.

போலீசார் இவர்களை கண்டித்து சிறையில் அடைத்து வாகனங்கள் பறிமுதல் செய்தாலும் இன்னும் சிலர் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார்.

மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள நடிகரை சபாஷ் சார் என சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Sasikumar on road to create Corona awareness

‘இன்று நேற்று நாளை’ பார்ட் 2 பணிகளை துவங்கிய 2 குமார்ஸ்

‘இன்று நேற்று நாளை’ பார்ட் 2 பணிகளை துவங்கிய 2 குமார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indru netru naalai 2ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’.

டைம் டிராவல் கதையில் உருவான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டாராம்.

இந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தாணுவின் 3வது அணி.. அப்போ விஷால்.?

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தாணுவின் 3வது அணி.. அப்போ விஷால்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal thanuதமிழ் சினிமாவில் பல சங்கங்கள் இருந்தாலும் எல்லாராலும் முக்கியமாக கவனிக்கப்படும் சங்கங்கள் இரண்டு.

ஒன்று தயாரிப்பாளர்கள் சங்கம்.. மற்றொன்று நடிகர்கள் சங்கம்.

தற்போது இவையிரண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.

இந்த இரண்டு சங்கத்திலும் விஷால் அணியே பதவியே இருந்தது. இவரால் ஏற்பட்ட நிர்வாக பிரச்சினையாலும் பல மோதல்களாலும் தற்போது சங்கத்தை அரசே நடத்தி வருகிறது.

நடிகர் சங்கம் தேர்தல் நடந்து கிட்டதட்ட 10 மாதங்கள் ஆன போதிலும் இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதாவது வருகிற ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் 2 அணிகள் மோதுவதாக அறிவித்துள்ளன. அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தற்போது பதிவி காலத்தில் உள்ள. விஷால் அணி போட்டியிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக தாணு தலைமையில் ஒரு அணி களத்தில் இறங்கியுள்ளது.

இதில் எஸ்.பிக்சர்ஸ் பாலாஜி, சிவாஜி பிலிம்ஸ் குமார், பாலு, ரங்கநாதன் உட்பட பலரும் இணைந்துள்ளனர்.

இந்த அணிக்கு பல மூத்த தயாரிப்பாளர்களும் ஆதரவு இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பெயரை தன் மகனுக்கு சூட்டிய சிபிராஜ்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பெயரை தன் மகனுக்கு சூட்டிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran chinnamalaiசத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்து அண்மையில் வெளியான படம் ‘வால்டர்’.

போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்குள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் தியேட்டர்களும் மூடப்பட்டன.

தற்போது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ஜான் மகேந்திரன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows