தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தார் சமக சரத்குமார்.
தாங்கள் கேட்ட சீட் கிடைக்காத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.
பின்னர், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
இந்த கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பின்னர் கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சியான தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டது.
இதனை அடுத்து சமக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.
இதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது “தேர்தல் களத்தில் உள்ள சமக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க வேண்டும்.
எனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை” என்றார்.
மேலும், “அதிமுக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றக்கூடியதாக உள்ளன.
மக்கள் உழைத்து பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே, இலவசப் பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை” எனவும் சரத்குமார் கூறினார்.
SMK candidates list announced by Sarath Kumar