சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

சமக 37 வேட்பாளர்கள் பட்டியல்..: நானும் ராதிகாவும் போட்டியிடவில்லை.. – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தார் சமக சரத்குமார்.

தாங்கள் கேட்ட சீட் கிடைக்காத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார்.

பின்னர், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பின்னர் கூட்டணியில் இணைந்த மற்றொரு கட்சியான தமிழ்நாடு இளைஞர் கட்சிக்காக சமகவிடம் இருந்து 3 தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டது.

இதனை அடுத்து சமக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 37 வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேட்பாளர்கள் பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

இதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது “தேர்தல் களத்தில் உள்ள சமக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க வேண்டும்.

எனவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மை துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை” என்றார்.

மேலும், “அதிமுக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒருசில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றக்கூடியதாக உள்ளன.

மக்கள் உழைத்து பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். எனவே, இலவசப் பொருட்களை வழங்கவேண்டிய அவசியமில்லை” எனவும் சரத்குமார் கூறினார்.

SMK candidates list announced by Sarath Kumar

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

‘அண்ணாத்த’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்த வில்லன் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் இப்பட சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர் 8 மாதத்திற்கு பிறகு இதன் சூட்டிங் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது.

அங்கு படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே சூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் “தான் அரசியலுக்கு வரப்போவதில்லை. மன்னித்து விடுங்கள் மக்களே” என அறிக்கை விட்டார். (2020 டிசம்பர் 29)

இதையடுத்து நிறுத்தப்பட்ட சூட்டிங் சென்னையில் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி ரீலிசாக உள்ளது.

Famous villain joins Rajiniaknth’s Annatthe

Capture

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

ஆனந்தம் விளையாடும் வீட்டில் குடும்ப உறுப்பினரானார் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venbaகுடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள்.

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது.

சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதில் கௌதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார் வெண்பா. இவரின் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.

கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது.

பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன் எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.

கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல் தான் குடும்பகதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும்.

முன்பே சொன்னதுபோல் விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள்.

எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும்.

அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.

Actress Venba is on board for Gautham Karthik’s next film

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் ‘சூரரைப் போற்று’ இல்லை..; சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டனர்.

இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியானது.

இந்த நிலையில், தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது.

இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Soorarai Pottru is out of OSCARS

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

‘பில்லா’ ரீ-ரிலீஸ்..: பஸ் மேல ஆட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்..; இன்னா தல இப்பூடி பண்றாங்கோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

இப்படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு் நொந்து போனவர்களுக்கு ஆறுதலாய் அமைந்தது அஜித்தின் ‘பில்லா’ ரீ-ரீலீஸ்.

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தின் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இதனை தல ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சில ரசிகர்கள் சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி ஆட்டம் போட்டனர்.

இன்னா தல இப்பூடி பண்றாங்கோ.. என அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை திட்டியப்படி சென்றனர்.

சமீபத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு எல்லை மீறிய ரசிகர்களை கண்டித்து அஜித் அறிக்கை விட்டார். தற்போது அடுத்த அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். இனி என்னாகுமோ?

அலப்பறை Starts in @Priya_Cinemas

#BillaInPriyaCinemas
#Valimai

Ajith fans attrocities in billa re release theatres

ஆண்டு வருமானம் வெறும் 1000 தான்.; சீமானை ச்சீ..ச்சீ என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

ஆண்டு வருமானம் வெறும் 1000 தான்.; சீமானை ச்சீ..ச்சீ என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது.

முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டுகிறார் சீமான்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில்…

“தனக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி கூலி வேலைக்கு செல்வோர் கூட தினம் 500-1000/- வரை சம்பாதிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் என (பெரிய பொய்யை) சீமான் குறிப்பிட்டுள்ளதால் அவரை சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

NTK leader Seeman revealed his property and income

More Articles
Follows