தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகார்த்திகேயனின் 20 வது படத்தை இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் அனுதீப். இவர் நவீன் பொலிஷெட்டி நடித்த ஜதி ரத்னலு வெற்றிப் படத்தை இயக்கியவர்.
தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
உக்ரைனியன் நடிகை Maria Riaboshapka இதில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை சுரேஷ் புரோடக்ஷன்ஸுடன் இணைந்து வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த கைடு ஒருவருக்கு வெளிநாட்டு பெண் மீது ஏற்படும் காதல் தான் இந்தப் படத்தின் மையக் கதை என கூறப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்தின் படப்பிடிப்பும் காரைக்காலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.)
தற்போது SK20 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சிவகார்த்திகேயன் மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
அப்போது புதுச்சேரி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த கட்டணத்தை குறைக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தாராம் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan requests Pondy CM Rangasamy