சங்கீதம் கற்காத பாலு கற்றவருக்கு இணையாக பாடுவார்.; அசையாமல் இருக்கும் அவரை பார்க்க என் மனம் தாங்காது.. – கே.ஜே. யேசுதாஸ்

சங்கீதம் கற்காத பாலு கற்றவருக்கு இணையாக பாடுவார்.; அசையாமல் இருக்கும் அவரை பார்க்க என் மனம் தாங்காது.. – கே.ஜே. யேசுதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb kj yesudasபாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரும் பாடகருமான கே.ஜே. யேசுதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்…

என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்க வில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போல பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ் பி பி அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம்.

பாலு முறையாக சங்கீதம் கற்க வில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

சங்கராபரணம் என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்க வில்லை என கூறமாட்டர்கள்.

இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

சிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடகள்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

பாரிஸில் நங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் என குரல் மாற்றி கிண்டல் செய்தார் பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்து பகிர்ந்தார்.

அவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான்.

பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன் இந்த COVID ஆல் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது.

நான் US ல் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், Stage -ல் பாலுவும் நானும் ஒரு ஓரமாக சிரித்துக்கொண்டிருப்போம் அப்படி பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது.

என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

-கே.ஜே. யேசுதாஸ்

Singer KJ Yesudas condolence message to SPB

உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!

உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith spbபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு ஒட்டு மொத்த இசை ப்ரியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று முதல் இந்தியாவில் எந்த மூலையில் திரும்பினாலும் எஸ்பிபி பாடல்களையே கேட்கிறோம்.

ரசிகர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.

கொரானோ தொற்று காரணமாக பலரால் நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை.

ஆனாலும் சில பிரபலங்கள் எஸ்பிபி மீது வைத்திருந்த மரியாதையினால் நேரில் சென்றனர்.

இன்று SPB பண்ணை வீட்டிற்குள் அனுமதி இல்லை என தெரிந்தும் தாமரைப்பாக்கத்தில் நடந்த இறுதிச் சடங்கில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான், வைபவ், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் இரங்கல் தெரிவிக்கவோ அஞ்சலி செலுத்தவோ செல்லவில்லை.

சினிமாவுக்கு வருவதற்கு முன் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்தரம் அஜித்.

எஸ்பிபி உடல் நல்லடகத்தின் போது விஜய் நேரில் இறுதி அஞ்சலி

அப்போது ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தில் அஜித்தை நாயகனாக்க தயாரிப்பாளருக்கு அவரை அறிமுகப்படுத்தியவரே எஸ்பிபி தானாம்.

மேலும் எஸ்பிபி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதான்.

இறுதி அஞ்சலிக்கு நேரில் வர முடியாத சூழ்நிலை அஜித்துக்கு இருந்திருக்கலாம்.

ஆனால் ஓர் இரங்கல் அறிக்கையாவது கொடுத்திருக்கலாமே ? அதற்கு கூட மனமில்லையா அஜித் சார்.?

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல்களான… உன்னைப் பார்த்த பின்பு நான்…(காதல் மன்னன்) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. (அமர்க்களம்) ஆகிய பல பாடல்களை பாடியது எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No condolence message from Ajith to late singer SPB

எஸ்பிபி உடல் நல்லடக்கம்.: இறுதிச் சடங்குகளை செய்தார் சரண்; 24 காவலர்கள் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்

எஸ்பிபி உடல் நல்லடக்கம்.: இறுதிச் சடங்குகளை செய்தார் சரண்; 24 காவலர்கள் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legend SP Balasubramanyams funeral live updatesபிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 1.04 மணியளவில் மரணமடைந்தார்.

அவரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.

நேற்று இரவு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி. அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் 12 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.

அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் காவலர்கள் இறுதி அரசு மரியாதை கொடுத்தனர்.

அதன்படி 24 காவலர்கள் தங்கள் துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர்.

பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.

Legend SP Balasubramanyams funeral live updates

BREAKING எஸ்பிபி உடல் நல்லடகத்தின் போது விஜய் நேரில் இறுதி அஞ்சலி

BREAKING எஸ்பிபி உடல் நல்லடகத்தின் போது விஜய் நேரில் இறுதி அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay paid his last respect to late singer SPBபிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 1.04 மணியளவில் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் 12.30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.

அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. (சற்று நேரத்தில்) இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.

Actor Vijay paid his last respect to late singer SPB

BREAKING பாடகர் எஸ்பிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் – தமிழக அரசு

BREAKING பாடகர் எஸ்பிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB funeral imagesசெப்டம்பர் 25 இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு பிரபல பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர் சென்னை, டெல்லி அணி வீரர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்பிபி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என திருவள்ளூர் எஸ்பி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
செய்யப்படும்.

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.

அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Singer SPB’s Funeral With Full State Honours on Saturday

ஒரு சகாப்தம் முடிந்தது. இனி இசையும் உலகமும் முன்புபோல இருக்காது…; SPB பற்றி சித்ரா

ஒரு சகாப்தம் முடிந்தது. இனி இசையும் உலகமும் முன்புபோல இருக்காது…; SPB பற்றி சித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb chitraஇன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு பிரபல பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் அவருடன் ஆயிரக்கணக்கான படங்களில் இணைந்து பாடிய சின்னக்குயில் சித்ரா தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்…

ஒரு சகாப்தம் முடிந்தது. இனிமேல் இசையும், உலகமும் பழையபடி இருக்காது. என்னை நல்ல பாடகியாக மாற்றுவதற்கு அவர் வழிநடத்தியதற்கு நன்றி எனக்கு வார்த்தைகள் போதாது. சாவித்திரியம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும், குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

An era is over. Music will never be the same. World will never be the same. Words are not enough to Thank him for guiding me to be a better singer. Cannot think about a concert without your great & gracious presence. Condolences &prayers to Savithriamma,Charan,Pallavi & Family.

Singer Chitra condolence to demise of legendary singer SPB

More Articles
Follows