தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் சிம்பு கலந்துக் கொள்ளவில்லை.
ஆனால் அதனையடுத்து சிம்பு செய்தியாளர்களை சந்தித்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு காவிரி நீர் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்படி சிலர் வாட்டர் பாட்டில்களில் காவிரி நீரை தமிழர்களுக்கு கொடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை பகிரிந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு சேலம் சென்றுள்ளார். அங்கு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டார்.
அதன்பின் பேசிய சிம்பு, ‘காவிரி பிரச்சனை குறித்து நான் பேசியதற்கு சிறந்த ஆதரவு இருந்தது.
சும்மா பேசிவிட்டு இருந்து விடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதற்காக பியூஸ் மனுஷிடம் பேசினேன். அவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார்.
இதைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்காக சேலம் வந்தேன். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை’ என்றார்.