சேலத்தில் சிம்பு திடீர் சுற்றுப்பயணம்..; அரசியல் நோக்கமா..?

சேலத்தில் சிம்பு திடீர் சுற்றுப்பயணம்..; அரசியல் நோக்கமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் சிம்பு கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் அதனையடுத்து சிம்பு செய்தியாளர்களை சந்தித்து கன்னட மக்கள் தமிழர்களுக்கு காவிரி நீர் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி சிலர் வாட்டர் பாட்டில்களில் காவிரி நீரை தமிழர்களுக்கு கொடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை பகிரிந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சேலம் சென்றுள்ளார். அங்கு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டார்.

அதன்பின் பேசிய சிம்பு, ‘காவிரி பிரச்சனை குறித்து நான் பேசியதற்கு சிறந்த ஆதரவு இருந்தது.

சும்மா பேசிவிட்டு இருந்து விடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதற்காக பியூஸ் மனுஷிடம் பேசினேன். அவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார்.

இதைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்காக சேலம் வந்தேன். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை’ என்றார்.

காவிரி நீர் கிடைக்க விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய ராகேஷ்

காவிரி நீர் கிடைக்க விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய ராகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Rakesh made awareness song for Cauvery water Issueமுன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.

சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன்.

காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், வலிகள், உணர்வுகள் மத்திய அரசை எட்டவேண்டும் எனும் விதமாக என்னுடைய தனிப்பட்ட முயற்சியாக இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குநர் ராகேஷ்.

தற்போது இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தஞ்சை, திருச்சி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்த பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராகேஷ்.

Director Rakesh made awareness song for Cauvery water Issue

மிஷ்கின்-தர்புகா சிவா கூட்டணியில் தரமணி நாயகன் வசந்த் ரவி

மிஷ்கின்-தர்புகா சிவா கூட்டணியில் தரமணி நாயகன் வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin darbuka sivaதரமணி படத்தில் யதார்த்த நாயகனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் வசந்த்ரவி.

அதனையடுத்து தற்போது அறிமுக இயக்குனர் அருண் மதீஸ்வரன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

வில்லனாக டைரக்டர் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை மனோஜ் என்பவர் ஆர். ஏ. ஸ்டூடீயோ உடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்த தகவல்களை படத்தின் நாயகன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Taramani fame Vasanth Ravi team up with MYsskin and Darbuka Siva

Vasanth Ravi‏ @iamvasanthravi 17m17 minutes ago
Finally, I am very happy to share out the news of my next project, it’s Pure Action film with Director Arun Matheswaran @lukukeku ; starring alongside with one of my fav director #Mysskin ; Music by @DarbukaSiva ; Produced by Manoj @crmk2012 and @RA_Studios_ ; PRO : @onlynikil

வாரத்திற்கு 3 படங்கள்தான் ரிலீஸ்; விஷால் அறிவிப்பால் காலாவின் கதி.?

வாரத்திற்கு 3 படங்கள்தான் ரிலீஸ்; விஷால் அறிவிப்பால் காலாவின் கதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals new release plan Rajinis Kaala release may got more delayகோலிவுட்டில் நடைபெற்ற 48 நாட்கள் வேலைநிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியீட்டுக்கு காத்திருக்கும் படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் ரஜினியின் காலா ரிலீஸ் குறித்து ஏதாவது மாற்றம் உண்டாகுமா? என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அவர் கூறியதாவது…

“ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த படங்களை வேலை நிறுத்தத்தால் வெளியிட முடியவில்லை.
எனவே சம்பந்தபட்ட தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து பேசி, அனைத்துப் படங்களும் வெளியாகும் தேதியை முதலில் முடிவு செய்வோம்.

அந்த படங்களின் வரிசைப்படி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். எந்தப் பாகுபாடும் காட்டாமல், வாரத்திற்கு 3 படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

எனவே ஏப்ரல் 27ல் வெளியாகும் என அறிவித்திருந்த காலாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் காலா படத்தை வெளியிடும் லைகாவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக முன்பே அறிவித்திருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vishals new release plan Rajinis Kaala release may got more delay

50 வருட தமிழ் சினிமாவையே வியக்க வைத்த விஷால்

50 வருட தமிழ் சினிமாவையே வியக்க வைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals ground breaking revolution makes him adorable icon of Indian showbizதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 17, 2018) முடிந்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது.

இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்‌ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்துள்ள நன்மைகளுக்காக அவரைப் புகழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த சலுகைகள் இவைதான் என்று பலர் பாராட்டுகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், FEFSI ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ததுதான் இதன் தொடக்கப்புள்ளி. ஒரு முக்கியமான தருணத்தில், படத் தயாரிப்புகளை நிறுத்தி FEFSI உடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல விஷயங்களை நெறிப்படுத்தினார்.

அதுவரை அவை யோசித்த பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தன. இந்தச் செயலே, அவருக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது.

இதனால்தான் அவர் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராகாவும், திரையரங்கு உரிமையாளர்கள், மாநில அரசு உள்ளிட்ட பல தரப்பினரிடம் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் விஷால் போராட்டத்தைத் தொடங்கியபோது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இன்று தமிழ்த் திரையுலகமே மகிழ்ச்சியிலும் கொண்டாட்ட உணர்விலும் திளைக்கிறது. அவர்கள் அனைவரும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி சொல்கின்றனர்.

நல்ல மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 100% கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் வெளிப்படைத்தன்மை.

பார்வையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு அனுமதித்த கட்டணங்களுக்குட்பட்டு படத்துக்கேற்றபடி டிக்கெட் விலை வைத்துக் கொள்வதற்கான வசதியுடன் (ஃப்ளெக்ஸிபில் டிக்கெட்டிங்) 3 அடுக்குகளில் டிக்கெட் கட்டணங்கள், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட திரையரங்குகளில் இருக்கும் ஈ.சினிமாவில் 50% விலை குறைப்பு, (டி-சினிமாவுக்கான விலை அதற்காக அமைக்கப்பட்டுள்ள தென்னிந்திய கூட்டு செயல்பாட்டுக் குழுவால் நிர்ணயிக்கப்படும்) உள்ளிட்டவை திரையுலகினருக்கு வெற்றியை உறுதிசெய்யும் விளைவுகள்.

ஒரு வாரத்துக்கு ரூ.5000/-, படத்தின் முழு ஓட்டத்துக்கு ரூ.10,000 மற்றும் ஒரு காட்சிக்கு ரூ.250 என்ற கட்டண முறையை க்யூப் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த கட்டண முறை ஆறு மாதங்களுக்கு சோதிக்கப்படும்.

அதற்குள் இதை நிரந்தரமாக்கிவிடுவோம் அல்லது இது சரியாகப் பயனளிக்கவில்லை என்று கட்டணங்களை மாற்றச் சொல்வோம் என்று அரசு மற்றும் திரையுலக அமைப்புகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சொன்னார் விஷால்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் சாதனைகள் இந்திய திரையுலகில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. விஷாலின் நோக்கமும் மன உறுதியும் அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளன என்று அண்மைக் காலங்களில் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Vishals ground breaking revolution makes him adorable icon of Indian showbiz

மீண்டும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

மீண்டும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and yogi babuபொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை அடுத்து `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார்.

நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், முக்கிய வேடத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பே மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் யோகி பாபு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்பட சூட்டிங் மே மாதம் தொடங்கப்பட உள்ளது.

More Articles
Follows