தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது.
இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது..
“நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்காக ரசிகர்கள் நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள்.. இனிமேல் நீங்கள் எனக்காக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சென்று.. என் தலைவன் வருவான் டா என் தலைவன் செய்வான் டா.. அப்படி.. இப்படி என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.
இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருங்கள். ஹாயாக ஏசி ரூமில் அமர்ந்து கொள்ளுங்கள்.. எனக்காக இனி நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்.. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்..
இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க.. நான் வேற மாதிரி வந்துட்டேன்.. இனிமே விடவே மாட்டேன்.. என் ரசிகர்கள் தலைகுனிய விடவே மாட்டேன்..
ஐ யம் எ லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடி ஆடியது முதல் இன்று வரை தமிழக மக்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள்..
மாநாடு என்ற பெரிய வெற்றியை எனக்கு கொடுத்தார்கள்..்அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற பட வெற்றியை கொடுத்தார்கள்.. இன்று 10 தல என்பதில் வைத்து அழகு பார்க்கிறார்கள்..
இனிமே தமிழ் சினிமா பெருமைப்படும் அளவுக்கு நான் நடந்து கொள்வேன்.. இதை நான் தன்னம்பிக்கையோடு சொல்கிறேன்.. என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் உருக்கமாக பேசினார் சிலம்பரசன்.
Simbu speech at Pathu Thala audio launch