தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை இந்தாண்டு பொங்கலுக்கு நடத்தியாக வேண்டும் என தமிழக மாணவர்கள் பல்வேறு இடங்களை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றாலும் சில இடங்களில் போலீசார் லத்திசார்ஜ் மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக பேச சிம்பு பத்திரிகையாளர்களை அழைத்துள்ளார்.
மேலும் லத்திசார்ஜ் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதயம் வலிக்கிறது. உங்கள் சகோதரன் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
எனவே சிம்பு ரசிகர் ஒருவர், நீங்கள் இப்படி பேசினால் உங்கள் மீது எல்லா வழக்குகளையும் போடுவார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு சிம்பு ஒப்புக் கொண்டு ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ளார்.