தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களை ஒன்று சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான விழா ஜூலை 1 சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிடவிருக்கிறார்கள்.இந்நிலையில், இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சைமா குழுவினர்.
அதில் குஷ்பூ, ஜெயம் ரவி, ராணா, வேதிகா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது ஜெயம் ரவி பேசியதாவது…
“இந்த சைமா விழா ஒரு தனிப்பட்ட விழாவாக தெரியவில்லை. சைமா என் குடும்பம். குடும்பத்தில் ஈகோ, பொறாமை எதுவும் இருக்காது. அதுபோல்தான் இந்த விழாவும்.ராணா என் நண்பனை போன்றவர். இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.
சென்ற வருடம் சைமாவில் கலந்துகொண்ட போது எந்தப் படத்திற்காகவும் நான் விருது வாங்கவில்லை.ஆனால் இம்முறை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.