சிபிராஜ்-நிகிலா விமல் இணைந்துள்ள *ரங்கா* டிசம்பரில் ரிலீஸ்

சிபிராஜ்-நிகிலா விமல் இணைந்துள்ள *ரங்கா* டிசம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj starrer Ranga will be 2018 December releaseசிபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார்.

அடுத்து வெளிவர இருக்கும் அவரின் ‘ரங்கா’ படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

“வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள்.

ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது.

குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது.

அந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோதே, உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.

இயக்குனர் வினோத் டி.எல் பற்றி அவர் கூறும்போது, “அவர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. ‘காக்கும் கடவுள் ரங்கநாதன்’ என்பதன் தொடர்பு தான் ‘ரங்கா’ என்ற தலைப்பு.

சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார்.

ராம்ஜுவன் (இசை), அர்வி (ஒளிப்பதிவு), அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை வடிவமைப்பு), ட்யூனி ஜான் 24AM (டிசைன்ஸ்), விஜி-தஸ்தா (நடன அமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

Sibiraj starrer Ranga will be 2018 December release

PETTA Exclusive: சசிகுமார் மடியில் ரஜினி குழந்தைகளுக்கு மொட்டை

PETTA Exclusive: சசிகுமார் மடியில் ரஜினி குழந்தைகளுக்கு மொட்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PETTA exclusive Rajini Trisha Sasikumar shooting updatesகபாலி, காலா படங்களை முடித்துவிட்டு தீவிர அரசியலில் ரஜினி ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜே படத்தை இயக்குவதாலும் அனிருத் இசையமைப்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடிப்பதால் இதன் மீதாக எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது இதன் சூட்டிங் காசி மற்றும் வாரணாசியில் பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில் த்ரிஷாவின் சகோதரனாக சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவது போன்ற ஒரு நிகழ்வு நடப்பதாகவும் அப்போது குழந்தைகள் சசிகுமார் மடியில் உட்கார்ந்து இருப்பதாகவும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிகிறது.

இந்த காட்சியில்தான் ரஜினியின் செகண்ட் லுக்கான முறுக்கு மீசையுடன் வருகிறாராம்.

இந்த காட்சிகளில்தான் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

PETTA exclusive Rajini Trisha Sasikumar shooting updates

பட்டைய கிளப்பும் *பேட்ட*; செகண்ட் லுக்கில் மாஸ் காட்டும் ரஜினி

பட்டைய கிளப்பும் *பேட்ட*; செகண்ட் லுக்கில் மாஸ் காட்டும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pettaசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு காசி மற்றும் வாரணாசியில் பகுதிகளில் நடந்து வருகிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் ரஜினியின் தாடி கொஞ்சம் நரைத்து இருந்தது.

இந்நிலையில் பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்ள்ளனர்.

இதில் ரஜினி மிகவும் இளமையாக மறுக்கு மீசையுடன் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த லுக் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

எனவே இந்த செகண்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் டிரண்ட்டாகி வருகிறது.

ஊழலுக்கு எதிராக விஜய் பேசியது வரவேற்கத்தக்கது… : கமல்ஹாசன்

ஊழலுக்கு எதிராக விஜய் பேசியது வரவேற்கத்தக்கது… : கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vijayகடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று சர்கார் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் விஜய் பேசும்போது… நான் முதல்வர் ஆனால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என பேசினார்.

இதுகுறித்து நடிகர் கமல் பேசியதாவது…

விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருந்தால் அவர் அரசியல் வருவதில் தவறில்லை.

இந்தியாவில் இப்போது உள்ள பிரச்னை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

நடிகை குஷ்பு திறந்து வைத்த *கூகை திரைப்பட இயக்க நூலகம்*

நடிகை குஷ்பு திறந்து வைத்த *கூகை திரைப்பட இயக்க நூலகம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushbooஇயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் “கூகை திரைப்பட இயக்கம்” எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார்.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை சாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் , உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே ….

“ மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன் .

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமது படைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன்.

என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி.

கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சி இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பது திறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

விழாவில் பேசிய நடிகை குஷ்பு

“இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது.

புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும். இந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,

புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

உதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று.

வாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும்.

ஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும்.

இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்றார்.

அம்பேத்கரை காட்டினால் கலவரம் வெடிக்கும் என மிரட்டினார்கள்.. : ரஞ்சித்

அம்பேத்கரை காட்டினால் கலவரம் வெடிக்கும் என மிரட்டினார்கள்.. : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள்”.

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,

“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது.

அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்.

இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.

இயக்குனர் ராம் பேசுகையில்,

“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள்.

ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை.

இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று.

அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார்.

More Articles
Follows