கூட்டணியே இல்லாமல் சாதித்த சீமான்.: பேச்சாடா பேசுனீங்க.; நாம் தமிழரை நசுக்கிய தமிழர்கள்.; வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்கா?

கூட்டணியே இல்லாமல் சாதித்த சீமான்.: பேச்சாடா பேசுனீங்க.; நாம் தமிழரை நசுக்கிய தமிழர்கள்.; வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்கா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman (1)தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 117 ஆண் + 117 பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிற்க வைத்து அவர்களுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்தார்.

வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கியது மற்ற கட்சியினரை ஆச்சர்யப்படுத்தியது.

சீமானின் பேசிய வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் வைராலனது. இதனால் நாம் தமிழர் தம்பிகளும் சில இடங்களில் ஓவராகவே பேசி திரிந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார் சீமான்.

நாம் தமிழரில் யார் வெற்றி பெறவில்லை என்றாலும் சீமான் சிக்ஸர் அடிப்பார் என மக்களே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

வாய்ப்பில்ல ராஜா… வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்காக அவரே சொன்னாரா? எனவும் சிலர் கிண்டலடித்தனர்.

நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையே பெறவில்லை.

ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று திமுக & அதிமுகவை அடுத்து 3வது இடத்தில் உள்ளது.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது எனலாம்.

இந்த வாக்கு வங்கி வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு நாம் தமிழருக்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும் பெரிய பெரிய கட்சிகளே கூட்டணியை நம்பிய போதும் தன் கட்சியை மட்டுமே நம்பி தேர்தல் களமிறங்கிய சீமானை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சீமான்..

Seeman wins no seats but his party makes a mark

புதுச்சேரி 30 MLA லிஸ்ட்.: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தோல்வி.; 6 சுயேட்சைகள் வெற்றி..; CM சீட்டுக்கு ஆசைப்படும் பாஜக.!

புதுச்சேரி 30 MLA லிஸ்ட்.: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தோல்வி.; 6 சுயேட்சைகள் வெற்றி..; CM சீட்டுக்கு ஆசைப்படும் பாஜக.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondy election results 2021புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் மாஹி ஏனாம்) 30 தொகுதிகளைக் கொண்டது.

இம்மாநில சட்டசபைத் தேர்தலில்… காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதே போல என்.ஆர்.காங்கிரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நேற்று மே 2 மூன்று கட்டங்களாக நடைபெற்ற புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

இதில்… 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவின.

எதிரணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.

5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

என்ஆர். காங். தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ரங்கசாமி.

ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியை வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

இந்த நிலையில் ரங்கசாமி முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் முதல்வர் பதவிக்கு பிஜேபி ஆசைப்படுகிறதாம்..

வெற்றி பெற்ற MLAக்கள் முதல்வரை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் கரானா தெரிவித்துள்ளார்.

இதனால் யார் முதல்வர்? என்ற குழப்பம் புதுச்சேரி அரசியலில் நீடிக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் விவரம் இதோ…

காங்கிரஸ்:

1. வைத்தியநாதன் – லாஸ்பேட்

2. ரமேஷ் பரம்பத் – மாஹே

திமுக:

1. அனிபால் கென்னடி – உப்பளம்

2. சிவா – வில்லியனூர்

3. நாஜிம் – காரைக்கால் தெற்கு

4. சம்பத் – முதலியார் பேட்டை

5. நாக தியாகராஜன் – நிரவி பட்டினம்.

6.செந்தில் – பாகூர்.

சுயேட்சை வெற்றியாளர்கள்:

1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் – ஏனாம்

2. நேரு – உருளையன்பேட்டை

3. பிரகாஷ் குமார் – முத்தியால்பேட்டை

4. சிவா – திருநள்ளாறு

5. அங்காளன் – திருபுவனை

6. சிவசங்கரன் – உழவர்கரை.

என்ஆர். காங்கிரஸ்..

1. தேனீ.ஜெயக்குமார் – மங்கலம்

2. கே.எஸ்.பி. ரமேஷ் – கதிர்காமம்

3. லட்சுமிகாந்தன் – ஏம்பலம்

4. ராஜவேலு – நெட்டப்பாக்கம்

5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் – அரியாங்குப்பம்

6. ஏ.கே.டிஆறுமுகம் – இந்திரா நகர்

7. ரங்கசாமி – தட்டாஞ்சாவடி

8. திருமுருகன் – காரைக்கால் வடக்கு

9. சந்திர பிரியங்கா – நெடுங்காடு

10. லட்சுமி நாராயணன் – ராஜ்பவன்

பாஜக:

1. ஜான்குமார் – காமராஜ் நகர்

2. ரிச்சர்ட் ஜான்குமார் – நெல்லி தோப்பு

3. நமச்சிவாயம் – மண்ணாடிப்பட்டு

4. கல்யாண சுந்தரம் – காலாப்பட்டு

5. ஏம்பலம் செல்வம் – மணவெளி

6. சாய் ஜெ.சரவணன் – ஊசுடு

Puducherry Election Result 2021

#BREAKING கோவை தெற்கில் கடும் போட்டி.: கமல்ஹாசனை வீழ்த்தினார் பிஜேபி வானதி சீனிவாசன்

#BREAKING கோவை தெற்கில் கடும் போட்டி.: கமல்ஹாசனை வீழ்த்தினார் பிஜேபி வானதி சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவருமான நகமல் ஹாசன் போட்டியிட்டார்.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மநீம & காங் இடையே போட்டி நிலவியது.

கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரையும் பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னேறினார்.

இதனால் கமல்ஹாசன் – வானதி சீனிவாசனுக்கும் இடையே போட்டி உருவானது.

இறுதியாக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

1550 வாக்குகள் குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் கமலை வீழ்த்தினார் வானதி.

MNM Leader Kamal loses to BJP Vanathi by 1500 votes in Coimbatore South

BREAKING அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடையும் வகையில் ஆட்சி செய்ய ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

BREAKING அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடையும் வகையில் ஆட்சி செய்ய ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் திமுக 6வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

முக ஸ்டாலின் முதல்வர் ஆகிறார்.

இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

அதோடு, தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்தியுள்ளார்.

“சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் அன்பு நண்பர் மதிப்பிற்குரிய ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக்கி பெறும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Rajini wishes MK Stalin for victory in TN assembly election

தமிழகத்தில் 6வது முறை திமுக ஆட்சி..; முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.; தேசிய தலைவர்கள் வாழ்த்து. ஸ்டாலின் அறிக்கை முழு விவரம்!

தமிழகத்தில் 6வது முறை திமுக ஆட்சி..; முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.; தேசிய தலைவர்கள் வாழ்த்து. ஸ்டாலின் அறிக்கை முழு விவரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

எனவே தமிழகத்தில் 6வது முறையாக திமுக ஆட்சி அமைக்கிறது.

தற்போது முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.

அவருக்கு ராகுல்காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முக ஸ்டாலின் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்….

” ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! ‘ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்’ என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் – ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள் – எத்தனை வேதனைகள் – எத்தனை பழிச்சொற்கள் – எத்தனை அவதூறுகள் – என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்.

இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது! – அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! – அதை நாளைய தமிழகம் சொல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

DMK Leader MK Stalin thanks letter to peoples for winning in Election

JUST IN எம்எல்ஏ ஆனார் நடிகர் உதயநிதி.; எய்ம்ஸ் செங்கல்லை கொடுத்து ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்

JUST IN எம்எல்ஏ ஆனார் நடிகர் உதயநிதி.; எய்ம்ஸ் செங்கல்லை கொடுத்து ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

உதயநிதி ஸ்டாலினுக்கு திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இவர் முதன்முறையாக போட்டியிட்டார்.

சென்னையில் இருக்கும் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் உதயநிதி.

தேர்தல் பிரசாரத்தின் போது.. ” 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். (கிண்டலடித்தார்) உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலோடு சென்றார் உதயநிதி.

(இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை திருடியதாக பாஜகவினர் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது வேறு கதை.)

தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ள நிலையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை திமுக தலைவரிடம் வழங்கினார் உதயநிதி.

அத்துடன் தமிழகம் திமுகவுடன் இருப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.

Udhayanidhi became first time MLA He won in Chepauk Thiruvallikeni Constituency

More Articles
Follows