தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி நேற்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் வேட்பு மனு நிறைவடைந்தது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுகிறது.
இந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரின் சமீபத்திய பேட்டியில்..
“டிக்டாக் செயலியில் தன்னை மட்டும் 7.5 கோடி இளைஞர்கள் பின்பற்றினர்.
இதனாலேயே பல்வேறு காரணங்களைக் கூறி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
பகிரியில் (வாட்ஸ் அப்) செயலியில் தற்போது ஒரு செய்தியை ஒரு நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும்.
தனது வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக சீமான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
*இதை படித்த பின்னர் சீமான் மீது நீங்க கடுப்பானால் நாங்க பொறுப்பல்ல..*
Seeman talks about Tik Tok ban ?