தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சற்றுமுன் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்தார்.
அப்போது 2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் மக்கள் 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
அதில், “ஆம்! அதிசயம் நிகழும். தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுபிம்பம் இனமானத் தமிழார்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும்.” என பதிவிட்டுள்ளார் சீமான்.
Seeman reaction to Rajinis statement about 2021 election wonders
ஆம்! அதிசயம் நிகழும்.
'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2019