பரபரப்பான பாம்பன் பர்ஸ்ட் லுக்; சரத்குமார்-வெங்கடேஷ் மீண்டும் கூட்டணி

பரபரப்பான பாம்பன் பர்ஸ்ட் லுக்; சரத்குமார்-வெங்கடேஷ் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumars Paamban first look goes viralமகாபிரபு,ஏய், சாணக்கியா, சண்டமாருதம் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ஏ. வெங்கடேசும், சரத்குமாரும் மீண்டும் இணைந்து உள்ளனர்.

அந்த படத்திற்கு பாம்பன் என பெயரிடப்பட்டு உள்ளது.

‘பாம்பன்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேலாடை இல்லாமல் பாம்பு உடையுடன் சரத்குமார் தோன்றியுள்ளார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

தற்போது சரத்குமார் மகேஷ்பாபு அய்ரா அத்வானி நடிக்கும் பாரத் அனே நினூ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மகேஷ்பாபு தந்தையாக சரத்குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sarathkumars Paamban first look goes viral

paamban 1

மீண்டும் விஸ்வரூபம்2.. டப்பிங் பணிகளில் பிஸியானார் கமல்

மீண்டும் விஸ்வரூபம்2.. டப்பிங் பணிகளில் பிஸியானார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasnஒரு பக்கம் தன் ரசிகர்களுடன் அரசியல் ஆலோசனை என பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தன் பட வேலைகளையும் கவனித்து வருகிறார் கமல்ஹாசன்.

இவர் இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

இப்படத்தில் கமலுடன் ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தற்போது இதன் டப்பிங் வேலைகளை துவங்கி விட்டார் கமல்.

விஸ்வரூபம் 2 பணிகளை முடித்து விட்டு ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளை துவங்விருக்கிறாராம்.

இதனையடுத்து ஷங்கரின் ‘இந்தியன்-2’ படத்தில் நடிப்பார் கமல்ஹாசன்.

டாப் ஹீரோயின்ஸ் உடன் டூயட் பாட ஆசைப்படும் சண்முகபாண்டியன்

டாப் ஹீரோயின்ஸ் உடன் டூயட் பாட ஆசைப்படும் சண்முகபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanmuga pandianமதுரவீரன் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது.

படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும்.

படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது.

இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் மதுரவீரன் படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான் இப்படம் உருவானது.

நான் நகரத்தில் வளர்ந்தாலும் நிறைய பயணம் மேற்கொள்வேன். சின்ன வயது முதல் அப்பாவுடன் மதுரை சென்றுள்ளேன். அம்மாவின் ஊருக்கு சென்றுள்ளேன். நிறைய கிராமங்களுக்கு சென்றுள்ளேன் அதனால் எனக்கு எந்தவொரு வித்யாசமும் தெரியவில்லை.

கிராமத்தில் நிறைய விவசாய நிலங்கள் இருக்கும் நகரத்தில் அனைத்தும் கட்டிடங்களாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் மதுரையில் நடிக்கும் போது எனக்கு வெளி ஊரில் நடிப்பது போன்ற உணர்வில்லை.

மதுரை என்னுடைய் சொந்த ஊர் எனக்கு மிகவும் சந்தோஷமாக தான் இருந்தது. படத்தில் மதுரையில் பேசப்படும் தமிழ் பாஷையை கொஞ்சம் பேசியுள்ளேன்.

படத்தில் மெரீனாவில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக கொள்ளாமல் போராட்டத்திற்கு காரணம் கிராமத்தில் தான் பிரச்சனை வருகின்றது அதனால் தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை அதற்கு தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட்டம் தோன்றியது.

கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன ஏதற்காக ஜல்லிக்கட்டு நடக்க தடை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் மதுரவீரன். என்னை பொறுத்தவரை படத்தின் கதையை மட்டுமே தான் பார்பேன். கதை மிகவும் உறுதியாக இருக்கும்பட்சத்தில் நடிக்க ஒப்புகொள்வேன். P.G. முத்தையா அவர்களின் கதை மிகவும் உறுதியானது.

அவர் கூறிய கதையை சிறப்பாக படமாக்கியுள்ளர். இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக மீனாட்சி இருந்தார். மீனாட்சியின் நடிப்பை நன்றாக வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் P.G. முத்தையா. மீனாட்சி நன்றாக தமிழ் தெரிந்தவர் முதல் படமாக இருந்தாலும் நன்றாக நடித்தார்.

ஒரு சில இடங்களில் தடுமாறும் போது முத்தையா உதவி செய்வார். கதைக்கு பெரிய நடிகை தேவைப்படும் போது நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். எல்லாருக்கும் பெரிய இயக்குனருடன், பெரிய நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை உள்ளது.

படத்தில் சமுத்திரகனி அவர்களுடன் நடித்த அனுபவம் மிக சிறந்த அனுபவம். சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும் என்பதால் என்னை அவர் அண்ணன் பையன் போல பார்த்துக்கொண்டார். படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.

அனைவரும் முத்த கலைஞர்கள் நான் சில இடங்களில் தடுமாறும் போது பெரும் உதவியாக இருந்தனர். தேனப்பன் அவர்கள் மாரிமுத்து அவர்கள் வேலராமமூர்த்தி அவர்கள் மைம் கோபி அண்ணன் என அனைவரும் உதவியாக இருந்தனர்.

படத்தில் என்னுடன் 5 பசங்கள் நடித்துள்ளார்கள் என்னுடைய நண்பர்களாக உண்மையிலும் எனக்கு நண்பர்களாகிவிட்டனர். சித்து, குணா, அருண்மொழி, ராஜபாண்டி, நரைன் இவர்களுடன் இருக்கும் போது படப்பிடிப்பு தளம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் பாலா, கதிர் நாங்கள் என 7 பேர் இணையும் போது படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும்.மதுரவீரன் படபிடிப்பு நடத்தப்பட்ட ஊர்களில் அனைவரும் எல்லா உதவிகளை செய்தனர். தொடந்து இந்த மாதிரியான சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பேன் என்று கூறினார் மதுரவீரன் படத்தின் நாயகன் சண்முகபாண்டியன்.

இந்த வருடம் போல அடுத்த வருடமும் சூர்யா பொங்கல்தான்.

இந்த வருடம் போல அடுத்த வருடமும் சூர்யா பொங்கல்தான்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TSK suriyaசூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் இந்தாண்டு 2018 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு எதிர்பார்த்த லாபம் இல்லை என தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை வெளியிட்ட பிரபல நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

ஜீன் மாதம் இப்பட சூட்டிங்கை ஆரம்பித்து அடுத்த ஆண்டு 2019 பொங்கல் தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே இந்தாண்டை போல அடுத்த ஆண்டும் சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்துதான்.

ரஜினியின் 2.0 படம் விலகியதால் குறி வைக்கும் விஸ்வரூப கமல்

ரஜினியின் 2.0 படம் விலகியதால் குறி வைக்கும் விஸ்வரூப கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்டமான படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடவிருந்தனர்.

ஆனால் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் வெளியீடு இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகவுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதியை குறி வைத்து கமல் தன் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது கமல் தன் விஸ்வரூபம் 2 படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பியாண்ட் த க்ளவுட்ஸ் டிரைலர்; ஈரானிய இயக்குநர் மஜீத்துக்கு பாராட்டு மழை

பியாண்ட் த க்ளவுட்ஸ் டிரைலர்; ஈரானிய இயக்குநர் மஜீத்துக்கு பாராட்டு மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trailer of Majid Majidis Beyond The Clouds goes viralபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் திரைக்கதையில் முன்னிறுத்திருக்கிறார்.

இது போன்ற சிந்தனை மஜீதியின் தனி சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றியதில் மட்டற்ற சந்தோஷத்தை பெற்றிருக்கிறோம்.

மேலும் நாமா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் இந்த திரைப்படம் உலகளவில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷரீன் மன்ந்ரி கேடியா பேசுகையில்,‘இந்திய மக்களின் ரசனையையும், சென்ட்டிமெண்ட்ஸையும் இயக்குநர் மஜீதியால் எப்படி துல்லியமாக கையாள முடிந்தது என்பதைப் பார்த்து நம்பமுடியாத வகையில் ஆச்சரியப்பட்டேன்.

கதைகள் மொழியின் வரம்புகளுக்கு உட்படாதவை என்ற அவரது நம்பிக்கை இதில் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. ஒரு நேர்மையான உணர்வை திரைமொழியில் சொன்னால், அது பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் என்பதை இதன் மூலம் மீண்டும் மஜீதி நிரூபித்திருக்கிறார்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா பேசுகையில்… ‘நடிகர்கள் இஷான் கட்டார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவர்களும் இயக்குநர் மஜீதியின் வழிகாட்டலை உறுதியைப் பின்பற்றி, அவர் காட்டும் புதிய உலகை பார்வையாளர்களுக்கும் காட்டியிருக்கிறார்கள்.

இந்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.‘ என்றார்.

இதனிடையே இந்த படம் ஒராண்டிற்கு முன்னர் (29 1 2017) இதே நாளில் மும்பையிலுள்ள முகேஷ் மில்லில் முதல் நாள் படபிடிப்புடன் தொடங்கியது. இன்று அதே நாளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இதற்காக கடுமையாக உழைத்த படக்குழுவினருக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trailer of Majid Majidis Beyond The Clouds goes viral

beyond the clouds

More Articles
Follows