தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று மார்ச் 14ல் ராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியின் மாற்று அரசியல் & மக்கள் புரட்சி பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
“ரஜினி பற்றி பேசினால் டிவி சேனல்களின் டிஆர்பி எகிறும் என்பதாலேயே நீங்கள் கேட்கிறீர்கள்.
அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் மக்கள்.. ; மீடியாக்களுக்கு ரஜினி நன்றி
ரஜினி குறித்து பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அப்புறம் பேசுறேன்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல இன்னல்களைக் கடந்து எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்.
எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை…”
இவ்வாறு சரத்குமார் பேசினார்.