தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த நவ. 29ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த 2.0 உலகமெங்கும் வெளியானது.
இதனையடுத்து அவர் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 2019 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்தை சர்கார் பட இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.
பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, ஸ்பைடர் படங்களுக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மேலும் 1991ல் ரஜினி நடித்த தளபதி படத்திற்கும் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தற்போது 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.