தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.
இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு செட்டில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷாவும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் மே மாதம் ‘லியோ’ படத்தின் செட்டில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இப்படத்தில் தங்கள் பாகங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
மேலும், மன்சூர் அலிகான், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் விரைவில் ‘லியோ’ படத்தின் நடிகர்களுடன் இணைய உள்ளனர்.
நடிகை த்ரிஷா தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் விளம்பரப் பணிகளை ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sanjay Dutt and Trisha to join the sets of ‘Leo’ in May