பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி

பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தார்.

ஆனால் அவை சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்தார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 25 ஆண்டுகளுக்கு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ல் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை முடித்துவிட்டு இப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Samuthirakani joins with Parthiban for Ulle Veliye 2

குஷ்பூ-சீமான் இருவரையும் இணைய வைத்த டிராபிக் ராமசாமி

குஷ்பூ-சீமான் இருவரையும் இணைய வைத்த டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khusboo teams up with Seeman for Traffic Ramasamyஅரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது.

கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர்.

ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் .

இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா, உபாசனா,கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர்.

அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் .

சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு ,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு.

இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது.

இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் விக்கி கூறும் போது ” நம் சமுதாயத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக 18 ஆண்டுகள் போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவரது “ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதையைப் படித்த போது இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அவர் மன வலிமை உள்ளவர். ஆனால் பழக எளிமையானவர். எஸ்.ஏ.சி அவர்கள் நடிக்க முன் வந்ததுமே படம் பெரிய அளவில் மாறிவிட்டது. “என்கிறார்.

படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும் போது ” டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் பற்றி முழுதாக அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கும் அவருக்கும் காதல் திருமணம் ,சட்டப் போராட்டம் போன்று பலவற்றில் ஒற்றுமைகள் இருந்தன. அவரை நேரில் சந்தித்த போது 83 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று வியப்பூட்டினார்.

அவரது உடல் மொழிகளை நேரில் கவனித்துக் கற்றுக் கொண்டேன் அதன்படி படத்தில் நடித்தேன் ” என்கிறார்.

தன்னைப் பற்றி உருவாகிற படம் பற்றி டிராபிக் ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் பேசும் போது, “என்னைப் பற்றிப் படமெடுக்க முன் வந்தது மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன்வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள்.

இதுவே தமிழ் நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.” என்கிறார்.

Khusboo teams up with Seeman for Traffic Ramasamy

கார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movieரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

லைகா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியை எதிர்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அழுத்தமான வில்லன் கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movie

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்; மும்பை சென்றார் கமல்

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்; மும்பை சென்றார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதுபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரவுள்ளதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் மும்பை சென்றுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் கமல்,

“உயிர்ழந்த ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தின் கலந்துகொள்வது வழக்கமில்லை என்று முடிவெடுத்த நிலையில், குடும்பத்தில் ஒருவராகக் கருதும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்கிறேன்.

பொதுமக்களுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதால், இடையூறுகள் ஏற்படும் என அதை தவிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், ராமநாதபுரத்தில் பேசிய போது தனக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வந்தனர்.

தற்போது கமல் இப்படி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சையில் விஷால்; எப்போது வீடு திரும்புவார்.?

தீவிர சிகிச்சையில் விஷால்; எப்போது வீடு திரும்புவார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalபாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த படம் ‘அவன் இவன்’.

இப்படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்திருந்தார் விஷால்.

இந்த படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இந்நாள் வரை விஷாலுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்பட்டது.

மேலும், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த போது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த இரு பிரச்சினைகளுக்காகவும் கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மூட்டுவலி, தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

எனவே அவர் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி மரணத்தால் மறைக்கப்பட்ட பாலியல் கொடூரம்; பிரசன்னா ஆதங்கம்

ஸ்ரீதேவி மரணத்தால் மறைக்கப்பட்ட பாலியல் கொடூரம்; பிரசன்னா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna raised question on murder minor girl harrasament at Vilupuramவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45).

கணவன் இறந்த நிலையில் 4 மகன்கள், 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதில் சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகம் பேசப்படாதது ஏன் என்று பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?” என்று எனக் கேட்டுள்ளார்.

மேலும் மனிதம் மரித்து விட்டதா? என ஆதங்கத்துடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Prasanna raised question on murder minor girl harrasament at Vilupuram

prasanna twit

More Articles
Follows