தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 20 வருட காலமாக அலசி ஆராயப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அன்றைய தினம் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து நடிகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியுள்ளதாவது…
கரைக்கு வரும் அலை பின்பு திரும்பி போய்விடும். புலி வருது புலி வருது கதையாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசுகிறோம்.
வருவதாக சொல்லிவிட்டு ஒருவேளை அவர் வராமல் போய்விட்டால், அவருடை இமேஜ் கடுமையாக பாதிக்கப்படும்.
டிசம்பர் 31ல் ரஜினி ஹாப்பி நியூ இயர் வாழ்த்து நிச்சயம் சொல்வார்.
அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது உலகத்தின் மிகப்பெரிய சூதாட்ட கேள்வியாக உள்ளது.”என்று தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.