தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம் நாட்டில் இந்து தீவிரவாதம் உள்ளது என கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதற்காக பல்வேறு இந்துக்கள் அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி சேகர் கூறியதாவது…
இந்து தீவிரவாதம் என்பது கமல்ஹாசன் கற்பனைதான். அது தவிர. வேறொன்றுமில்லை.
ஹாஸன் என்ற வடமொழி சொல்லை பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்துவிட்டது போலிருக்கிறது.
எதற்கெடுத்தாலும் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்துபோய்விடவில்லை.
அப்படி கமலுக்கு தமிழகத்தை விட கேரளாவைத்தான் பிடிக்கும் என்றால் அவர் அங்கே போய் வாழட்டும். சிலருக்கு சில விஷயங்கள் சிறு வயதிலிருந்து பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவை தவறு என்று ஆகிவிடுமா என்ன?
நம் இந்து மதத்தில் ஒழுக்கமான நெறிமுறைகள் உள்ளது. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்த இந்து மதம் பிடிக்காதுதான்.
தொடர்ந்து இந்துமதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல்ஹாஸன். அதன் விளைவு விபரீதமாக இருக்கும். கமல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார் எஸ்வி. சேகர்.