தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்களை 2வது கட்டமாக இன்று சந்தித்து வருகிறார்.
அப்போது அவர் பேசும்போது…
எனக்கு அரசியல் தெரியும். எனவேதான் அரசியலுக்கு வர தயங்குகிறேன்.
யுத்தம் களத்திற்கு வரும்போது வீரம் மட்டும் முக்கியமில்லை. வியூகம் முக்கியம். என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து நடிகரும் அரசியல் பிரமுகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியதாவது…
நான் ரஜினியின் நண்பர்தான். அவர் 45 வயதில் எடுக்க வேண்டிய அரசியல் முடிவை 68 வயதில் எடுக்கிறார்.
அப்படி ஒருவேளை அவர் எடுத்து அதை ஜெயித்துவிட்டால் நிச்சயம் அவருக்கு ஆண்டவன் அருள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.
ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வியூகம் அமைக்க வேண்டும் என்கிறார். போர் வருவதற்கு முன்பு வியூகம் அமைக்கலாம்.
போர் வந்துவிட்ட பிறகு வியூகம் அமைக்கிறேன் என்றால் போரை தள்ளி வைக்க முடியாது. அதற்குள் போர் முடிந்துவிடும்” என்றார்.
S Ve Shekar talks about Rajinis speech in Fans meeting