தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் நடிகர் அதர்வா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.6 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில்… ‛‛கிக் ஆஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்தார் அதர்வா. இதனை அவுட்ரேட் முறையில் நான் வாங்கி விநியோகம் செய்தேன். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்தேன்.
ஆனால் படத்தை சொன்ன தேதியில் முடிக்கவில்லை ரிலீசும் தாமதம் ஆனது. இதனால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதர்வா மீது புகார் அளித்தேன். விஷால் தலைமையில் ஒரு கூட்டமும் நடைபெற்றது.
என் பக்கம் நியாயம் இருக்கவே எனக்கு ஒரு படம் செய்து தர சொல்ல அதற்கு அதர்வாவும் ஓகே சொன்னார். அந்த படத்திற்கும் அட்வான்ஸாக பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி படத்தில் நடிக்க இல்லை.
இதனால் எனக்கு ஏற்பட்ட ரூ.6 கோடி நஷ்டத்தை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்.
என புகார் மனுவில் கூறியுள்ளார் மதியழகன்.
Rs 6 Crores Cheating case filed against Atharva