தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
40 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். அண்மைக்காலமாக ஹிந்திப்படங்களில் நடித்தும் தேசிய விருது பெற்றும் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ்ம் தற்போது இந்தியா முழுக்க பிரபலமாகி வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இந்த செய்தி இந்தியா முழுக்க பரவியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
விவாகரத்திற்கான காரணம் என்ன என்பதே தெரியாமல் திரையுலகினரும் ரசிகர்களும் குழம்பி போய் உள்ளனர்.
ஒரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு புறம் ரஜினி ரசிகர்கள் தலைவா.. நாங்க இருக்கோம் உன்னோடு என ஐஸ்வர்யா குடும்பத்தினருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
சில ரஜினி ரசிகர்கள் தனுஷ் பற்றி விமர்சிக்க அது தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
எனவே தனுஷ் ரசிகர்கள் ‘ We Love Dhanush… We stand with u Dhanush Anna..” என பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஜினி தனுஷ் ரசிகர்களிடையே கருத்து மோதல் நிலவியது.
சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.
அந்த நிகழ்வில் ரஜினி குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
அதன்பின்னர் டில்லியில் அக்டோபரில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் விருதுகள் பெற்றனர்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் தனுஷ்.
அப்போது அந்த போட்டோக்களை பதிவிட்டு “இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி”என கருத்து பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.
ஆனால் அதன்பிறகு தான் என்ன நடந்தது.? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக கோலிவுட்டில் எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு குடும்பத்தில் பிரச்ச்சினை உருவாக பெரிய காரணம்.. அன்பின்மை… பொருளாதார பிரச்சினை… நிம்மதியின்மை இப்படியாகத்தான் இருக்கும்.
நிச்சயமாக இவர்கள் குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை வர வாய்ப்பில்லை. கணவன் மனைவி இடையே அன்பு இல்லாமல் போனதால் நிம்மதியில்லாமல் இருந்திருக்கலாம்.
அப்படியென்றால் இவர்களிடையே வேறு யாராவது ஒருவர் நுழைந்துவிட்டாரா? என்பதும் கேள்வியாக ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னால் ஒரு சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் தனுஷ். தங்கமகன் படத்தில் நடிக்கும்போது அப்பட நடிகையுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாகவும் அது அப்போது முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது தெலுங்கு நடிகரை அந்த நடிகை விவாகரத்து செய்துவிட்டதால் தனுஷ் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இவையில்லாமல் 3 படத்தில் நடித்தபோது ஒரு நடிகையுடனும் விஐபி படத்தில் நடித்தபோது அந்த பட நடிகையுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் தனுஷ் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இவையில்லாமல் சுசி லீகிக்ஸில் தனுஷை பற்றிய விவகாரம் எழுந்தபோதே ஐஸ்வர்யா தனுஷ் இடையே மனக்கசப்பு உருவாக காரணமாக அமைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்ற போது சில நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம் தனுஷ் ஐஸ்வர்யா கட்டும் புதிய வீடு பணிகள் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சினையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
தனுஷை விட பெரிய நடிகர்கள் முக்கியமாக திருமணமான நடிகர்கள் காதல் காட்சிகளில் நெருக்கமான காட்சிகளை திரையில் தவிர்ப்பார்கள்.
ரீல் லைஃப் சினிமா வேறு… ரியல் லைஃப் வாழ்க்கை வேறு.. என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் அவர்கள் பிரச்சினையின்றி வாழ்கிறார்கள். இதை இளைய தலைமுறை நடிகர்கள் நட்சத்திர தம்பதியர்கள் புரிந்துக் கொண்டால் பிரச்சினையில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இன்னும் சில மாதங்களில் விவாகரத்துக்கான உண்மையான காரணம் தெரியாமலா போகும்… காத்திருப்போம் மக்களே…
Reason behind Dhanush and Aishwarya divorce?